அலைகள் ஓய்வதில்லை.
அந்த அலைகள் கரைக்கு வெறும் காட்சிகளே. கரை சலனமோ சஞ்சலமோ படுவதில்லை. வெறும் ஜடப் பொருளாக இருந்து அலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது.
இப்படித்தான் நானும் இருக்கின்றேன். எப்படி?! ஆயிரமாயிரம் என்ன அலைகள் என் உள்ளமெனும் கரையை ஓயாமல் வந்து மோதிக் கொண்டே இருக்கின்றன.அந்தக் கரையைப் போலவே நானும் சும்மாயிருக்கின்றேன்.வந்து வந்து மோதும்
முடிவிலா அலைகள்
பார்வயாலனகக் கரை
ஆயிரமாயிரம் எண்ணங்கள்
பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்
பதிவு செய்யாமல் நான்
முரண்
கரையை மோதும் அலைகள் ஒவ்வொரு நாளும் கரையில் புதிய மாற்றங்களைச் செய்து கொண்டே உள்ளன.கரையை உடைத்து, அரித்து , கரைத்து, அழித்து என்று பல மாற்றங்கள்.
இப்படித்தான் நானும் இருக்கின்றேன். ஆயிரமாயிரம் என்ன அலைகள் என் மனக் கரையை மோதிச் செல்கின்றன.ஒவ்வொன்றிலும் நான் பாதிப்பைச் சந்திக்கின்றேன். அன்பு, பாசம், கருணை, சோகம், கோபம், தாபம், ஆத்திரம், மானம், விருப்பம், காமம் என்று என்ன அலைகள் என்னைப் படுத்தும் பாடு, அப்பப்பா சொல்லி மாளாது. அலைகளைக் கரை என்ன செய்ய முடியும்? எண்ணங்களை மனம் நிறுத்த முடியுமா?!!
துரை முருகன்
பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா
Pages
Friday, 10 June 2011
விட்டதைப் பிடிக்கும் வியாதி
விட்டதைப் பிடிக்கும் வியாதி
மகாபாரதத்தில் தர்மபுத்திரனைப் போல் தர்மம் அறிந்தவர் யாருமில்லை. எமதர்மனால் முன்பு நச்சுப்பொய்கையிலும் பின்பு சொர்க்கத்திலும் பரீட்சிக்கப்பட்டு தேர்வு பெற்றவன் அவன். தன் தேகத்துடன் சொர்க்கம் போக முடிந்தவன் அவன் ஒருவனே. அப்படிப்பட்டவன் சூதாட்டத்தில் கலந்து போன போது கடைநிலை மனிதன் கூடச் செய்யத் தயங்கும் காரியத்தைச் செய்தான். தன் சகோதரர்களையும், மனைவியையும் பணயம் வைத்து ஆடினான். சூதாட்டம் ஆனானப்பட்ட தர்மபுத்திரனையே அப்படிச் செய்ய வைத்தது என்றால் மற்றவர்கள் விஷயத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை கேட்க வேண்டுமா?
சூதாட்டத்தில் பங்கேற்கும் பலரும் விட்டதைப் பிடிக்கும் வியாதியால் பீடிக்கப்படுகிறார்கள். அடுத்த முறை வென்று விடுவோம், விட்டதை எல்லாம் பிடித்து விடுவோம் என்று சூதாட்டத்தைத் தொடர்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியாகி விடுகிறார்கள். அது வரை அவர்களை சூதாட்டம் விடுவதில்லை.
தர்மபுத்திரன் விஷயத்திலேயே சூதாட்ட நாள் நடந்த கடைசி நிகழ்ச்சி பல பேர் கவனத்தை எட்டவில்லை. பாஞ்சாலியின் மானத்தைப் பகவான் காப்பாற்றிய பிறகு நரிகள் ஊளையிட, நாலா பக்கங்களில் இருந்தும் கழுதைகளும், பிணந்தின்னிக் கழுகுகளும் விகாரமாய் கத்த குலநாசம் வரப் போகிறதென்று பயந்து திருதராஷ்டிரன் தர்மபுத்திரன் இழந்ததை எல்லாம் அவனுக்குத் திருப்பித் தந்தான். பாண்டவர்களை இந்திரப்பிரஸ்தத்திற்குத் திரும்பிப் போகச் சொன்னான். ஆனால் அப்படிக் காப்பாற்றப்பட்டும் கூட தர்மபுத்திரனுக்குப் புத்தி வரவில்லை. சபையோர் தடுத்தும் கூட கேட்காமல் மீண்டும் ஒருமுறை சகுனியுடன் ஆடி 12 வருடம் வனவாசம், ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் என்ற நிபந்தனையுடன் ஆடித் தோற்றான். வியாசர் அவன் கடைசியாக ஆடியதை "கலிபுருஷனால் பீடிக்கப்பட்டவனாய் மறுபடி ஆட உட்கார்ந்தான்" என்கிறார். கடைசியில் கூட விட்டதைப் பிடிக்கும் வியாதி அவனையும் விட்டு வைக்கவில்லை.
இன்றைய காலத்தில் சூதாட்டம் பல ரூபங்களில் நடக்கின்றது. கஷ்டப்படாமல் சம்பாதிக்கும் ஆசை பலரையும் படாத பாடு படுத்துகிறது. உழைத்து சம்பாதித்து நாலு காசு சேர்க்க ஆகும் கால அளவு வரை பொறுத்திருக்க பலருக்கும் பொறுமை இல்லை. சூதில் இப்படி ஒரு பேராசையுடன் தான் அனைவரும் நுழைகிறார்கள். பின் சூது அவர்களை விடுவதில்லை. கடைசி வரை தன் தூண்டிலைப் போட்டு அது சபலப் படுத்துகிறது. இனியொரு முறை ஆடு, விட்டதைப் பிடித்து விடலாம் என்று ஆசை காட்டுகிறது.
ஒரு நம்பர் லாட்டரி நம் நாட்டில் எத்தனை குடும்பங்களை நிர்க்கதியாக்கியது என்பது நமக்குத் தெரியும். எத்தனையோ தினக்கூலிக்காரர்கள் தினமும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போய் லாட்டரிக் கடை முன் நிற்பதை சில வருடங்களுக்கு முன் பலரும் பார்த்திருக்கலாம். அன்றைய அனுபவம் அவர்களுக்கு அடுத்த நாளுக்கு உதவியதில்லை. விட்டதைப் பிடிக்கும் வியாதி தினம் தினம் அவர்களை லாட்டரியின் பக்கம் திருப்பியிருக்கிறது.
எனக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒருவர் அரசாங்க உத்தியோகத்தில் மிக சௌகரியமாக இருந்தார். அவருக்கு ஷேர் பிசினஸில் ஆரம்பத்தில் சிறிது லாபம் வர பின் அவர் தன்னுடைய சேமிப்பு எல்லாவற்றையும் அதில் போட்டார். சமீபத்திய நிலவரத்தில் அவர் எல்லா பணத்தையும் இழக்க நேரிட்டது. பல வெளிநாட்டு வங்கிகளில் க்ரெடிட் கார்டுகள், கடன்கள் எல்லாம் வாங்கி அதையும் ஷேரில் போட்டார். நண்பர்களிடமும் கடன் வாங்கிப் போட்டார். எல்லாம் இழந்து விட்டார். இழந்த அத்தனையையும் திரும்பப் பெறும் நம்பிக்கையில் கடைசியில் அரசாங்க வேலையையும் விட்டு அதில் கிடைத்த பிராவிடண்ட் ·பண்ட் முதலான தொகைகளைப் பெற்று அதையும் ஷேரில் போட்டு அத்தனையும் இழந்து இன்று மனைவி, இரண்டு குழந்தைகளுடன் கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிற்கிறார். விட்டதைப் பிடிக்கும் வியாதி அவரை எந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டது பாருங்கள்.
அந்த வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் அறிவைப் பயன்படுத்துவதில்லை. அடுத்தவர் அறிவுரையைப் பொருட்படுத்துவதில்லை. அதைத் தவிர வேறு எதையும் நினைத்துப் பார்க்க
மனம் வைப்பதில்லை.
உண்மையான புத்திசாலித்தனம் இந்த சூதாட்டத்தில் ஈடுபடாமலேயே இருப்பது தான். ஈடுபட்டபின் அதற்கு அடுத்தபடியான புத்திசாலித்தனம் விரைவிலேயே அதிலிருந்து மீள்வது தான். இழந்தவை நமக்குப் படிப்பினைகளாக இருக்கட்டும் என்று உணர்வது தான். அதை விட்டு அதை மீட்க மீதி இருப்பதையும் பணயம் வைக்கத் துணியாமல் இருப்பது தான். அப்படி மீட்டு விடுவேன் என்று பிடிவாதத்துடன் மீண்டும் அதில் புகுவது புதைகுழியில் கால் வைப்பது போல் ஆபத்தானது. எனவே இந்த வியாதிக்கு ஆளாகாமல் இருப்போமாக!.
- என்.கணேசன்
மகாபாரதத்தில் தர்மபுத்திரனைப் போல் தர்மம் அறிந்தவர் யாருமில்லை. எமதர்மனால் முன்பு நச்சுப்பொய்கையிலும் பின்பு சொர்க்கத்திலும் பரீட்சிக்கப்பட்டு தேர்வு பெற்றவன் அவன். தன் தேகத்துடன் சொர்க்கம் போக முடிந்தவன் அவன் ஒருவனே. அப்படிப்பட்டவன் சூதாட்டத்தில் கலந்து போன போது கடைநிலை மனிதன் கூடச் செய்யத் தயங்கும் காரியத்தைச் செய்தான். தன் சகோதரர்களையும், மனைவியையும் பணயம் வைத்து ஆடினான். சூதாட்டம் ஆனானப்பட்ட தர்மபுத்திரனையே அப்படிச் செய்ய வைத்தது என்றால் மற்றவர்கள் விஷயத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை கேட்க வேண்டுமா?
சூதாட்டத்தில் பங்கேற்கும் பலரும் விட்டதைப் பிடிக்கும் வியாதியால் பீடிக்கப்படுகிறார்கள். அடுத்த முறை வென்று விடுவோம், விட்டதை எல்லாம் பிடித்து விடுவோம் என்று சூதாட்டத்தைத் தொடர்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியாகி விடுகிறார்கள். அது வரை அவர்களை சூதாட்டம் விடுவதில்லை.
தர்மபுத்திரன் விஷயத்திலேயே சூதாட்ட நாள் நடந்த கடைசி நிகழ்ச்சி பல பேர் கவனத்தை எட்டவில்லை. பாஞ்சாலியின் மானத்தைப் பகவான் காப்பாற்றிய பிறகு நரிகள் ஊளையிட, நாலா பக்கங்களில் இருந்தும் கழுதைகளும், பிணந்தின்னிக் கழுகுகளும் விகாரமாய் கத்த குலநாசம் வரப் போகிறதென்று பயந்து திருதராஷ்டிரன் தர்மபுத்திரன் இழந்ததை எல்லாம் அவனுக்குத் திருப்பித் தந்தான். பாண்டவர்களை இந்திரப்பிரஸ்தத்திற்குத் திரும்பிப் போகச் சொன்னான். ஆனால் அப்படிக் காப்பாற்றப்பட்டும் கூட தர்மபுத்திரனுக்குப் புத்தி வரவில்லை. சபையோர் தடுத்தும் கூட கேட்காமல் மீண்டும் ஒருமுறை சகுனியுடன் ஆடி 12 வருடம் வனவாசம், ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் என்ற நிபந்தனையுடன் ஆடித் தோற்றான். வியாசர் அவன் கடைசியாக ஆடியதை "கலிபுருஷனால் பீடிக்கப்பட்டவனாய் மறுபடி ஆட உட்கார்ந்தான்" என்கிறார். கடைசியில் கூட விட்டதைப் பிடிக்கும் வியாதி அவனையும் விட்டு வைக்கவில்லை.
இன்றைய காலத்தில் சூதாட்டம் பல ரூபங்களில் நடக்கின்றது. கஷ்டப்படாமல் சம்பாதிக்கும் ஆசை பலரையும் படாத பாடு படுத்துகிறது. உழைத்து சம்பாதித்து நாலு காசு சேர்க்க ஆகும் கால அளவு வரை பொறுத்திருக்க பலருக்கும் பொறுமை இல்லை. சூதில் இப்படி ஒரு பேராசையுடன் தான் அனைவரும் நுழைகிறார்கள். பின் சூது அவர்களை விடுவதில்லை. கடைசி வரை தன் தூண்டிலைப் போட்டு அது சபலப் படுத்துகிறது. இனியொரு முறை ஆடு, விட்டதைப் பிடித்து விடலாம் என்று ஆசை காட்டுகிறது.
ஒரு நம்பர் லாட்டரி நம் நாட்டில் எத்தனை குடும்பங்களை நிர்க்கதியாக்கியது என்பது நமக்குத் தெரியும். எத்தனையோ தினக்கூலிக்காரர்கள் தினமும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போய் லாட்டரிக் கடை முன் நிற்பதை சில வருடங்களுக்கு முன் பலரும் பார்த்திருக்கலாம். அன்றைய அனுபவம் அவர்களுக்கு அடுத்த நாளுக்கு உதவியதில்லை. விட்டதைப் பிடிக்கும் வியாதி தினம் தினம் அவர்களை லாட்டரியின் பக்கம் திருப்பியிருக்கிறது.
எனக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒருவர் அரசாங்க உத்தியோகத்தில் மிக சௌகரியமாக இருந்தார். அவருக்கு ஷேர் பிசினஸில் ஆரம்பத்தில் சிறிது லாபம் வர பின் அவர் தன்னுடைய சேமிப்பு எல்லாவற்றையும் அதில் போட்டார். சமீபத்திய நிலவரத்தில் அவர் எல்லா பணத்தையும் இழக்க நேரிட்டது. பல வெளிநாட்டு வங்கிகளில் க்ரெடிட் கார்டுகள், கடன்கள் எல்லாம் வாங்கி அதையும் ஷேரில் போட்டார். நண்பர்களிடமும் கடன் வாங்கிப் போட்டார். எல்லாம் இழந்து விட்டார். இழந்த அத்தனையையும் திரும்பப் பெறும் நம்பிக்கையில் கடைசியில் அரசாங்க வேலையையும் விட்டு அதில் கிடைத்த பிராவிடண்ட் ·பண்ட் முதலான தொகைகளைப் பெற்று அதையும் ஷேரில் போட்டு அத்தனையும் இழந்து இன்று மனைவி, இரண்டு குழந்தைகளுடன் கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிற்கிறார். விட்டதைப் பிடிக்கும் வியாதி அவரை எந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டது பாருங்கள்.
அந்த வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் அறிவைப் பயன்படுத்துவதில்லை. அடுத்தவர் அறிவுரையைப் பொருட்படுத்துவதில்லை. அதைத் தவிர வேறு எதையும் நினைத்துப் பார்க்க
மனம் வைப்பதில்லை.
உண்மையான புத்திசாலித்தனம் இந்த சூதாட்டத்தில் ஈடுபடாமலேயே இருப்பது தான். ஈடுபட்டபின் அதற்கு அடுத்தபடியான புத்திசாலித்தனம் விரைவிலேயே அதிலிருந்து மீள்வது தான். இழந்தவை நமக்குப் படிப்பினைகளாக இருக்கட்டும் என்று உணர்வது தான். அதை விட்டு அதை மீட்க மீதி இருப்பதையும் பணயம் வைக்கத் துணியாமல் இருப்பது தான். அப்படி மீட்டு விடுவேன் என்று பிடிவாதத்துடன் மீண்டும் அதில் புகுவது புதைகுழியில் கால் வைப்பது போல் ஆபத்தானது. எனவே இந்த வியாதிக்கு ஆளாகாமல் இருப்போமாக!.
- என்.கணேசன்
இதுவல்லவோ பெருந்தன்மை!
இதுவல்லவோ பெருந்தன்மை!
அந்த இளைஞனுக்குக் கணக்கைத் தவிர வேறொன்றும் தெரியாது. கணக்கில் அவனுடைய சீனியர்களெல்லாம் அவனிடம் வந்து தங்கள் சந்தேகங்களைத் தெளிவித்துக் கொண்டு போவார்கள். பள்ளிப்படிப்பை முடித்த அவனால் கல்லூரிப்படிப்பை முடிக்க முடியவில்லை. காரணம் இரண்டு. ஒன்று வறுமை. மற்றொன்று கணக்கில் காட்டிய ஆர்வத்தை அவனால் ஆங்கிலம், வரலாறு முதலான மற்ற பாடங்களில் காட்ட முடியவில்லை.
அவன் மூளையில் கணித உண்மைகள் அருவியாய் வந்த வண்ணமிருக்க அவற்றை எழுதப் போதுமான காகிதங்கள் வாங்க அவனிடம் பணம் இருக்கவில்லை. (மாதம் சுமார் 2000 வெள்ளைத் தாள்கள் வேண்டியிருந்தது). தெருவில் காணும் காகிதங்களை எல்லாம் பத்திரப்படுத்தி அதில் எழுதிப் பார்ப்பான். சிலேட்டில் எழுதிப் பார்த்து முடிவுகளை மட்டும் காகிதங்களில் எழுதி வைத்துக் கொள்வான். காகிதங்களிலேயே பென்சிலில் முதலில் எழுதுவது, பின்பு அதன் மேல் பேனாவில் எழுதுவது என்று இருமுறை ஒரே காகிதத்தை உபயோகப்படுத்தினான்.
வேலை தேடி அலைந்த போது பலரிடமும் தான் நோட்டு புத்தகங்களாக சேர்த்து வைத்திருந்த அந்த கணித உண்மைகளைக் காட்டினான். பலருக்கு அவன் கணிதக் கண்டுபிடிப்புகளும், தேற்றங்களும் என்னவென்றே புரியவில்லை. முழுவதும் புரியா விட்டாலும் அந்த இளைஞன் ஒரு மேதை என்று புரிந்த சென்னை துறைமுக டிரஸ்ட் டைரக்டர் ஒருவர் அவனுக்கு ஒரு குமாஸ்தா வேலையை போட்டுக் கொடுத்தார். மாதம் ரூ.25/- சம்பளம். காலம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம். அந்த இளைஞன் ஸ்ரீனிவாச ராமானுஜன். பின் வேறு சில ஆசிரியர்களும், அறிஞர்களும் முயற்சிகள் எடுத்து ராமானுஜனுக்கு சென்னை பல்கலைகழகத்திலிருந்து மாதாந்திர ஆராய்ச்சித் தொகையாக ரூ.75/- வர வழி வகுத்தார்கள்.
ஆனால் ராமானுஜனின் கணிதக் கண்டுபிடிப்புகளைப் புரிந்து கொள்ளக் கூடிய மேதைகள் இந்தியாவில் அச்சமயம் இருக்கவில்லை. எனவே அவன் தன் தேற்றங்களில் 120ஐ தேர்ந்தெடுத்து கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற கணித மேதையான ஜி.எச்.ஹார்டிக்கு ஒரு கடிதத்துடன் அனுப்பி வைத்தான். உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பல கணித ஈடுபாட்டுடையவர்களூடைய கடிதங்களை தினந்தோறும் பெறும் அந்தக் கணித மேதைக்கு அந்தத் தடிமனான தபாலைப் பிரித்து முழுவதும் படித்துப் பார்க்க நேரமில்லை. சில நாட்கள் கழித்தே கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.
தான் ஒரு குமாஸ்தாவாகப் பணிபுரிவதாகவும், தனக்கு பட்டப்படிப்பு இல்லையென்றும், தான் பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்துள்ளதாகவும் ஆரம்பத்திலேயே ராமானுஜன் எழுதியிருந்தார். அவருடைய ஆங்கில நடையும் உயர்தரத்தில் இருக்கவில்லை. ஹார்டியைப் போன்ற ஒரு மனிதருக்கு மேற்கொண்டு படிக்காதிருக்க இது போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனாலும் இணைத்திருந்த தேற்றங்களை மேற்போக்காகப் படித்தவருக்கு அவற்றில் இரண்டு பெரிய முரண்பாடுகளைப் பார்க்க முடிந்தது. சிலவற்றில் மிக அபூர்வமான மேதைமை தெரிந்தது. சில இடங்களில் சமகாலத்தைய கணித முன்னேற்றத்தின் அடிப்படை ஞானம் கூட இருக்கவில்லை. அவர் எழுதிய ஒரு சில தேற்றங்கள் பற்றி முன்பே சிலர் எழுதி வெளியிட்டு விட்டிருந்தனர். அது கூட ராமானுஜனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ராமானுஜனுக்கு கற்றுத் தர ஆரம்பப் பாடங்களே நிறைய இன்னும் இருந்ததை ஹார்டி உணர்ந்தார்.
இங்கிலாந்தில் இருந்த புகழ்பெற்ற அந்த மேதைக்கு இந்தியாவில் அடிமட்ட நிலையில் இருந்த ராமானுஜனைப் பொருட்படுத்தாமல் விட எத்தனையோ காரணங்கள் இருந்தன. ஆனால் அத்தனை காரணங்களையும், குறைபாடுகளையும் மீறி அந்தத் தேற்றங்களில் ஆங்காங்கே தெரிந்த அந்த அபூர்வமான கணிதப் பேரறிவு ஹார்டியை அசைத்தது. பெரும் முயற்சி எடுத்து ஹார்டி ராமானுஜனை இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு வரவழைத்தார். ராமானுஜனுக்கு கணிதத்தில் பல அடிப்படை விஷயங்களை கற்றுத் தந்து தேற்றி கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மீதி சரித்திரமாகியது. ராமானுஜன் என்ற இந்தியக் கணித மேதை உலக அரங்கில் பிரபலமானார்.
தன்னுடைய துறையில் தன்னைக் காட்டிலும் திறமை மிக்கவனாய் ஒருவன் இருப்பதைக் கண்டுபிடித்து, அவன் முழுத்திறமையும் வெளிப்பட சில அடிப்படைப் பாடங்கள் அவன் கற்பது அவசியம் என்பதை அறிந்து அவனை அழைத்து வந்து அவற்றை கற்றுத் தந்து அவன் பெருமையை உலகறிய வைக்க வேண்டுமென்றால் எப்படிப்பட்ட மனம் வேண்டும் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த இந்த உலகில் அடுத்தவருக்கு இருக்கின்ற திறமைகளை முடிந்த அளவு அமுக்கப் பார்க்கும் மனம் படைத்த மனிதர்களுக்குக் குறைவில்லாத உலகில் இத்தனை சிரமம் எடுத்து இது போல் செய்ய எந்த அளவு பெருந்தன்மை இருக்க வேண்டும்!
தீட்டாத வைரமாய் சோபையிழந்து பிரகாசிக்காமல் போக இருந்த நம் நாட்டு மேதையை அடையாளம் கண்டு பட்டை தீட்டி கணிதம் உள்ளளவும் பிரகாசிக்க வைத்த அந்த மாமனிதருக்கு கணிதத்துறையும் நாமும் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.
(ராமானுஜன் குறித்த சில சுவாரசிய தகவல்கள்:-
* ஹார்டியின் சகாவான லிட்டில்வுட் என்ற கணித அறிஞர் ராமானுஜனுக்கு நெருங்கிய நண்பர்கள் எண்கள் தான் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு எண்ணைக் குறித்தும் பார்த்தவுடன் பல சுவையான தகவல்களை கூறும் பழக்கம் ராமானுஜனுக்கு இருந்தது.
* ராமானுஜனும் ஹார்டியும் இங்கிலாந்தில் ஒரு முறை 1729 என்ற எண் உடைய டாக்ஸியில் பயணம் செய்யும் போது அந்த எண்ணைப் பார்த்து ராமானுஜன் கூறினாராம். "இந்த எண்ணுக்கு ஒரு சிறப்பு உண்டு. இருவேறு ஜதை எண்களின் க்யூப்(cube)களின் மிகக்குறைந்த கூட்டுத் தொகை இந்த எண் தான்". பிரமித்துப் போனாராம் ஹார்டி. கணிதத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதன் விவரம்: 1729 = (1x1x1)+(12x12x12) = (9x9x9)+(10x10x10) )
* ராமானுஜனுக்கு கணிதத்தில் எத்தனை கஷ்டமான கேள்விகளுக்கும் எப்படி சுலபமாக பதில் கிடைக்கிறது என்று கேட்ட போது அவர் தன் குல தெய்வமான நாமகிரியம்மன் அவற்றிற்கெல்லாம் பதில் தருவதாக ஒரு முறை குறிப்பிட்டார்.
* காசநோயால் பாதிக்கப்பட்டு இந்தியா திரும்பிய ராமானுஜன் தன் கடைசி காலத்தில் உடல்வலியை மறக்க கடைசி வரை நோட்டுப் புத்தகத்தில் எண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். கணிதத்தில் மூழ்கும் போது எல்லாவற்றையும் மறந்து விடும் அவருக்கு கணிதமே வலி நிவாரணியாக அமைந்தது.)
- என்.கணேசன்
நன்றி: விகடன்
அந்த இளைஞனுக்குக் கணக்கைத் தவிர வேறொன்றும் தெரியாது. கணக்கில் அவனுடைய சீனியர்களெல்லாம் அவனிடம் வந்து தங்கள் சந்தேகங்களைத் தெளிவித்துக் கொண்டு போவார்கள். பள்ளிப்படிப்பை முடித்த அவனால் கல்லூரிப்படிப்பை முடிக்க முடியவில்லை. காரணம் இரண்டு. ஒன்று வறுமை. மற்றொன்று கணக்கில் காட்டிய ஆர்வத்தை அவனால் ஆங்கிலம், வரலாறு முதலான மற்ற பாடங்களில் காட்ட முடியவில்லை.
அவன் மூளையில் கணித உண்மைகள் அருவியாய் வந்த வண்ணமிருக்க அவற்றை எழுதப் போதுமான காகிதங்கள் வாங்க அவனிடம் பணம் இருக்கவில்லை. (மாதம் சுமார் 2000 வெள்ளைத் தாள்கள் வேண்டியிருந்தது). தெருவில் காணும் காகிதங்களை எல்லாம் பத்திரப்படுத்தி அதில் எழுதிப் பார்ப்பான். சிலேட்டில் எழுதிப் பார்த்து முடிவுகளை மட்டும் காகிதங்களில் எழுதி வைத்துக் கொள்வான். காகிதங்களிலேயே பென்சிலில் முதலில் எழுதுவது, பின்பு அதன் மேல் பேனாவில் எழுதுவது என்று இருமுறை ஒரே காகிதத்தை உபயோகப்படுத்தினான்.
வேலை தேடி அலைந்த போது பலரிடமும் தான் நோட்டு புத்தகங்களாக சேர்த்து வைத்திருந்த அந்த கணித உண்மைகளைக் காட்டினான். பலருக்கு அவன் கணிதக் கண்டுபிடிப்புகளும், தேற்றங்களும் என்னவென்றே புரியவில்லை. முழுவதும் புரியா விட்டாலும் அந்த இளைஞன் ஒரு மேதை என்று புரிந்த சென்னை துறைமுக டிரஸ்ட் டைரக்டர் ஒருவர் அவனுக்கு ஒரு குமாஸ்தா வேலையை போட்டுக் கொடுத்தார். மாதம் ரூ.25/- சம்பளம். காலம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம். அந்த இளைஞன் ஸ்ரீனிவாச ராமானுஜன். பின் வேறு சில ஆசிரியர்களும், அறிஞர்களும் முயற்சிகள் எடுத்து ராமானுஜனுக்கு சென்னை பல்கலைகழகத்திலிருந்து மாதாந்திர ஆராய்ச்சித் தொகையாக ரூ.75/- வர வழி வகுத்தார்கள்.
ஆனால் ராமானுஜனின் கணிதக் கண்டுபிடிப்புகளைப் புரிந்து கொள்ளக் கூடிய மேதைகள் இந்தியாவில் அச்சமயம் இருக்கவில்லை. எனவே அவன் தன் தேற்றங்களில் 120ஐ தேர்ந்தெடுத்து கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற கணித மேதையான ஜி.எச்.ஹார்டிக்கு ஒரு கடிதத்துடன் அனுப்பி வைத்தான். உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பல கணித ஈடுபாட்டுடையவர்களூடைய கடிதங்களை தினந்தோறும் பெறும் அந்தக் கணித மேதைக்கு அந்தத் தடிமனான தபாலைப் பிரித்து முழுவதும் படித்துப் பார்க்க நேரமில்லை. சில நாட்கள் கழித்தே கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.
தான் ஒரு குமாஸ்தாவாகப் பணிபுரிவதாகவும், தனக்கு பட்டப்படிப்பு இல்லையென்றும், தான் பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்துள்ளதாகவும் ஆரம்பத்திலேயே ராமானுஜன் எழுதியிருந்தார். அவருடைய ஆங்கில நடையும் உயர்தரத்தில் இருக்கவில்லை. ஹார்டியைப் போன்ற ஒரு மனிதருக்கு மேற்கொண்டு படிக்காதிருக்க இது போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனாலும் இணைத்திருந்த தேற்றங்களை மேற்போக்காகப் படித்தவருக்கு அவற்றில் இரண்டு பெரிய முரண்பாடுகளைப் பார்க்க முடிந்தது. சிலவற்றில் மிக அபூர்வமான மேதைமை தெரிந்தது. சில இடங்களில் சமகாலத்தைய கணித முன்னேற்றத்தின் அடிப்படை ஞானம் கூட இருக்கவில்லை. அவர் எழுதிய ஒரு சில தேற்றங்கள் பற்றி முன்பே சிலர் எழுதி வெளியிட்டு விட்டிருந்தனர். அது கூட ராமானுஜனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ராமானுஜனுக்கு கற்றுத் தர ஆரம்பப் பாடங்களே நிறைய இன்னும் இருந்ததை ஹார்டி உணர்ந்தார்.
இங்கிலாந்தில் இருந்த புகழ்பெற்ற அந்த மேதைக்கு இந்தியாவில் அடிமட்ட நிலையில் இருந்த ராமானுஜனைப் பொருட்படுத்தாமல் விட எத்தனையோ காரணங்கள் இருந்தன. ஆனால் அத்தனை காரணங்களையும், குறைபாடுகளையும் மீறி அந்தத் தேற்றங்களில் ஆங்காங்கே தெரிந்த அந்த அபூர்வமான கணிதப் பேரறிவு ஹார்டியை அசைத்தது. பெரும் முயற்சி எடுத்து ஹார்டி ராமானுஜனை இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு வரவழைத்தார். ராமானுஜனுக்கு கணிதத்தில் பல அடிப்படை விஷயங்களை கற்றுத் தந்து தேற்றி கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மீதி சரித்திரமாகியது. ராமானுஜன் என்ற இந்தியக் கணித மேதை உலக அரங்கில் பிரபலமானார்.
தன்னுடைய துறையில் தன்னைக் காட்டிலும் திறமை மிக்கவனாய் ஒருவன் இருப்பதைக் கண்டுபிடித்து, அவன் முழுத்திறமையும் வெளிப்பட சில அடிப்படைப் பாடங்கள் அவன் கற்பது அவசியம் என்பதை அறிந்து அவனை அழைத்து வந்து அவற்றை கற்றுத் தந்து அவன் பெருமையை உலகறிய வைக்க வேண்டுமென்றால் எப்படிப்பட்ட மனம் வேண்டும் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த இந்த உலகில் அடுத்தவருக்கு இருக்கின்ற திறமைகளை முடிந்த அளவு அமுக்கப் பார்க்கும் மனம் படைத்த மனிதர்களுக்குக் குறைவில்லாத உலகில் இத்தனை சிரமம் எடுத்து இது போல் செய்ய எந்த அளவு பெருந்தன்மை இருக்க வேண்டும்!
தீட்டாத வைரமாய் சோபையிழந்து பிரகாசிக்காமல் போக இருந்த நம் நாட்டு மேதையை அடையாளம் கண்டு பட்டை தீட்டி கணிதம் உள்ளளவும் பிரகாசிக்க வைத்த அந்த மாமனிதருக்கு கணிதத்துறையும் நாமும் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.
(ராமானுஜன் குறித்த சில சுவாரசிய தகவல்கள்:-
* ஹார்டியின் சகாவான லிட்டில்வுட் என்ற கணித அறிஞர் ராமானுஜனுக்கு நெருங்கிய நண்பர்கள் எண்கள் தான் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு எண்ணைக் குறித்தும் பார்த்தவுடன் பல சுவையான தகவல்களை கூறும் பழக்கம் ராமானுஜனுக்கு இருந்தது.
* ராமானுஜனும் ஹார்டியும் இங்கிலாந்தில் ஒரு முறை 1729 என்ற எண் உடைய டாக்ஸியில் பயணம் செய்யும் போது அந்த எண்ணைப் பார்த்து ராமானுஜன் கூறினாராம். "இந்த எண்ணுக்கு ஒரு சிறப்பு உண்டு. இருவேறு ஜதை எண்களின் க்யூப்(cube)களின் மிகக்குறைந்த கூட்டுத் தொகை இந்த எண் தான்". பிரமித்துப் போனாராம் ஹார்டி. கணிதத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதன் விவரம்: 1729 = (1x1x1)+(12x12x12) = (9x9x9)+(10x10x10) )
* ராமானுஜனுக்கு கணிதத்தில் எத்தனை கஷ்டமான கேள்விகளுக்கும் எப்படி சுலபமாக பதில் கிடைக்கிறது என்று கேட்ட போது அவர் தன் குல தெய்வமான நாமகிரியம்மன் அவற்றிற்கெல்லாம் பதில் தருவதாக ஒரு முறை குறிப்பிட்டார்.
* காசநோயால் பாதிக்கப்பட்டு இந்தியா திரும்பிய ராமானுஜன் தன் கடைசி காலத்தில் உடல்வலியை மறக்க கடைசி வரை நோட்டுப் புத்தகத்தில் எண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். கணிதத்தில் மூழ்கும் போது எல்லாவற்றையும் மறந்து விடும் அவருக்கு கணிதமே வலி நிவாரணியாக அமைந்தது.)
- என்.கணேசன்
நன்றி: விகடன்
கனவு
கனவு

மனிதனின் கருவறை தானே அவன் என்னங்களும் நினைவுகளும்
பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் அவனில் பிறந்தது தானே.
அவனோடு சேர்ந்தே வருவது வேறு யாரு சொல்லு.
பிறந்தவுடன் பெற்றோர்களின் நெஞ்சினிலே உதிர்த்திடுவாய்.
பள்ளி நாட்களில் வாழ்வை எண்ணி நொந்திடுவாய்
வாலிப வயதில் வரும் துணையை நினைத்தே மிதந்திடுவாய்
துணையும் வந்துவிட்டால் குழந்தைகளுக்காய் ஏங்கிடுவாய்
குழந்தைகளும் கிடைத்து விட்டால் அவர்கள் வாழ்விற்காய் உன்னை வருத்திடுவாய்.
பேரப்பிள்ளைகளை கொஞ்சும் ஆசையும் உன்னை விட்டு வைக்காதே.
காலத்தின் கட்டாயம் கனவுகள் நீ கண்டுதானே ஆகவேண்டும்
கண்ட கனவுகள் நிஜமாகும் போது.மறுபடியும் மறுபடியும் பிறந்திடுவாயே.
கவிஞர் இராஜேந்திரகுமார்

மனிதனின் கருவறை தானே அவன் என்னங்களும் நினைவுகளும்
பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் அவனில் பிறந்தது தானே.
அவனோடு சேர்ந்தே வருவது வேறு யாரு சொல்லு.
பிறந்தவுடன் பெற்றோர்களின் நெஞ்சினிலே உதிர்த்திடுவாய்.
பள்ளி நாட்களில் வாழ்வை எண்ணி நொந்திடுவாய்
வாலிப வயதில் வரும் துணையை நினைத்தே மிதந்திடுவாய்
துணையும் வந்துவிட்டால் குழந்தைகளுக்காய் ஏங்கிடுவாய்
குழந்தைகளும் கிடைத்து விட்டால் அவர்கள் வாழ்விற்காய் உன்னை வருத்திடுவாய்.
பேரப்பிள்ளைகளை கொஞ்சும் ஆசையும் உன்னை விட்டு வைக்காதே.
காலத்தின் கட்டாயம் கனவுகள் நீ கண்டுதானே ஆகவேண்டும்
கண்ட கனவுகள் நிஜமாகும் போது.மறுபடியும் மறுபடியும் பிறந்திடுவாயே.
கவிஞர் இராஜேந்திரகுமார்
தனிமை=
தனிமை=

வாழ்வில் கொடியதும் வெறுமையும் கொண்டதே.
எத்துணையும் இல்லை இனிமையும் காணோம்.
எதற்க்காக இந்த நிலையற்ற வாழ்வு.
புரியாத மனிதரிடம் புழுவாக துடிக்கின்றேன்.
புரிந்து தான் அவர்கள் என்ன செய்தார்கள்.
காலமும் நினைவுகளும் நிரந்தரம் இல்லையே.
கனவுகள் சிதைந்து கண்ணீர் மட்டும் மிஞ்சியதே.
ஏன் இந்த கொடிய நிலை எனக்கு மட்டும்.
புள்ளி மான் மாதிரி துள்ளி திரிந்த என்னை.
தள்ளி வைத்து அழகு பார்ப்பது ஏன் தானோ.
காற்றலைகள் ஒன்று சேர்கின்றதே,
இந்த அபலை வாழ்வு தான் எப்போ?
கவிஞர் இராஜேந்திரகுமார்

வாழ்வில் கொடியதும் வெறுமையும் கொண்டதே.
எத்துணையும் இல்லை இனிமையும் காணோம்.
எதற்க்காக இந்த நிலையற்ற வாழ்வு.
புரியாத மனிதரிடம் புழுவாக துடிக்கின்றேன்.
புரிந்து தான் அவர்கள் என்ன செய்தார்கள்.
காலமும் நினைவுகளும் நிரந்தரம் இல்லையே.
கனவுகள் சிதைந்து கண்ணீர் மட்டும் மிஞ்சியதே.
ஏன் இந்த கொடிய நிலை எனக்கு மட்டும்.
புள்ளி மான் மாதிரி துள்ளி திரிந்த என்னை.
தள்ளி வைத்து அழகு பார்ப்பது ஏன் தானோ.
காற்றலைகள் ஒன்று சேர்கின்றதே,
இந்த அபலை வாழ்வு தான் எப்போ?
கவிஞர் இராஜேந்திரகுமார்
Subscribe to:
Posts (Atom)