*தமிழே நீ தலைகுனிதல் தகுமோ..
தமிழன் என்று எங்களை தலைநிமிர
செய்த நீ தலைகுனிதல் தகுமோ!!...
செந்தமிழே எம் தீந்தமிழே..
உன்னை தீண்டுவார் வாழத்தகுமோ
உன்னை தாங்குவார் யாம்இருக்க!!...
அன்னைத்தமிழை அடகு வைத்தவர்கள் ..
மத்தியில் ஆளவைக்க நினைக்கும்
உனைபோன்ற ஆண்மகன் உண்டோ!!...
உன் சீரிய குரலால்..
எம்மை சீர்படுத்திய உன்
சீற்றத்திற்கு உண்டோ சிறைவாசம்!!...
சோழனின் வீரத்தையும் தமிழனின்
மானத்தையும் ஒருங்கே பெற்ற
தம்பியின் தளபதியே தமிழ்மகனே!!...
தம்பியின் வழியில் தமிழ்..
காணத்துடிக்கும் உன் பின்னால்
நிற்போம் தம்பியின் தம்பிகள்!!...
தேசியத்தை உடைத்தெறிந்த எங்கள்..
தமிழ் தேசியமே நாம்
காண்போம் தமிழீழ தேசியம்!!!
.......*தம்பி*......
No comments:
Post a Comment