பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

என்று வரும் அந்த இனிய நாள்

3.என்று வரும் அந்த இனிய நாள்?

மனிதம் வளர்ந்தது நன்று ...
உன்னை மனிதர் அறிய முன்பு ...
நீ வளர்ந்த பின்பு ...
மனிதனை அழிக்கின்றாயே இன்று ...

பாவங்கள் பல செய்தும் ...
சேர்க்க தூண்டும் பாவியே உன்னை ...
நேர்மையாய் உழைப்பவர்க்கு
அடங்கிக் கொள்வாய் கைகளுக்குள் ....
குறு வழியில் செல்வோர்க்கு...
தலை மேலே குவிந்து கொள்வாய் ...

இறந்தவனின் நெற்றியிலே ..
செல்லாத சில்லரையாய் சென்றிடுவாய் ...
அது கூட எரிகையிலே ....
வெட்டியானின் பையுக்குள் புகுந்திடுவாய்...

கருவுக்கும் நீ தேவை ....
கருவறைக்கும் நீ தேவை.....
பிறப்பே நீயாகிப் போனது ஏன் ...

பாவங்கள் பல செய்தும் ...
வீட்டுக்குள் உன்னை அழைக்க ...
பல பேர்கள் காத்திருப்பார் ...

வஞ்சமாகி வந்து நின்று ...
ஒழுங்குகளை சீர் குழைத்தாய் ...
வறுமையாக வந்து நின்று ...
கொலை கொள்ளை கேடானாய் ...

அன்புக்குள் புகுந்து கொண்டு ...
பங்குச் சண்டை பிறப்பித்தாய் ...
சீதனமேனும் வடிவில் வந்து...
பெண் வாழ்வை சீர் குழைத்தாய் ...

வறுமையாய் வேஷமிட்டு ...
பலர் அறிவை நீ அழித்தாய் ...
பள்ளிச் செல்லும் பாலகரை ....
தொழிலாலியாய் ஆக்கி வைத்தாய் ...
வறுமை கொண்ட மாதரினை ...
வழி தவற நீ வைத்தாய் ...

பலர் சொல்ல கேட்கின்றேன் ...
நல்லதும் உன்னாலே ...
கேட்டதும் உன்னாலே என்று ...
உயிர் உள்ளதும் உன்னாலே ...
உயிர் போவதும் உன்னாலே என்று ...

யாரோ சொல்கிறார் ...
உன்னை கடவுள் என்று ...
இன்னும் பலர் அதற்கும் மேல் என்பார்...

நாடாது உன்னிடம் -
நல்லவர் மனம் ...
துரவிகளுக்கெல்லாம் -
நீ வெறும் பிணம் ....

மகா பாவியே
உன் பெயர் தான் பணம் ...
உனக்கு ஏன் தான்
இந்த குணம் ....

சபிக்கின்றேன் உன்னை
அழிந்துப் போ என்று ....
பண்ட மாற்று காலம் ...
இனியும் வாராதோ ...?
மனிதமும் இனிதாகவே மலராதோ ...?
என்று வரும் அந்த இனிய நாள் ....?

No comments:

Post a Comment