பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே

9.ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...!!!

முன்னம் ஒரு காலத்திலே உனக்கெனவே வாழ்கையிலே
நீ அழுதிடும் ஓசையிலே நான் அழும் குரல் கேட்கலையே ...
நீ புன்னகை புரிந்திடவே என் சுமைகள் மறைந்ததுவே
கை கடுக்க உழைக்கையிலே சோர்வேனக்கு தெரியலையே ....

நீயுறங்கும் நேரத்திலே என் கண்கள் உறங்களையே
நீ சுகமாய் உறங்கிடவே என் கண்கள் விழித்ததுவே...
உன் வயிற்றை நிரப்பிடவே என் வயிறும் காய்ந்ததுவே
உன் தாகம் தணிகையிலே என் தாகம் தணிந்ததுவே ...

நீ நன்றாய் படித்திடவே நான் விரதம் இருந்தேனே
நீ நிமிர்ந்து நடந்திடவே நான் தலையை குனிந்தேனே ...
நீ படித்து முடிக்கையிலே வேலை வெளிநாட்டினிலே
போவதாக சொல்கையிலே நான் பதறி போனேனே ...

குடி இருந்த வீட்டையுமே சொன்னாயே விற்றிடவே
நீ பயணம் சென்றிடவே வீட்டையும் நான் விற்றேனே
சென்ற முதல் மாதத்திலே நீ அனுப்பிய கடிதத்திலே
உன் கஷ்டங்கள் சொன்னதுமே என் கஷ்டங்கள் மறைந்ததுவே ...

அன்பு பாசம் நிறைந்திடவே சின்ன சின்ன பரிசுகளே
நான் உனக்கு வாங்கியதே மனம் அனுப்பிட எண்ணியதே
மறதி எனும் பழக்கத்தையே இன்னும் நீ விடவில்லையே
நீ அனுப்பிய கடிதத்திலே முகவரி நீ எழுதலையே ...
.
ஈரேழு மாதத்திலே மறு கடிதம் வரவில்லையே
உன் சுகத்தை அறிந்திடவே என் மனசும் ஏங்கியதே ...
நீ சுகமாய் வாழ்ந்திடவே பல பூஜைகள் செய்தேனே
என் உறக்கம் தொலைத்தேனே நோயாளி ஆனேனே ...

வாடகையும் வீட்டினிலே ஏறிக்கொண்டு போனதுவே
வேலைவெட்டி செய்திடவே கையிரண்டும் நடுங்கியதே ..
முதுமை என்னை ஆட்டிடவே உன் நினைவும் என்னை வாட்டியதே
யாருமில்லை அருகினிலே என் சோகம் சொல்லிடவே ...

நான் இருமும் இருமளிலே பெருந்தெருவே திரும்பிடுதே
என் மூச்சு சத்தத்திலே பறவைகளும் விழித்திடுதே...
என் இதய துடிப்பதுவே உன் பெயரை சொல்லிடுதே
மகனே என் பாசத்தையே உன் மனசுக்கு தெரியலையே ...

உன்னை பார்த்த கண்களிலே பார்வை மங்கி போகிறதே
வந்திடுவாய் ஒரு முறையே இல்லை பார்வை போய் விடுமே ...
பெட்டி கடை ஓரத்திலே கிழிந்த பாயில் படுக்கையிலே
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே ...

உறங்காத நேரத்திலே உன் கஷ்டம் தோன்றிடுமே
வெள்ளைக்காரன் நாட்டினிலே புரியாத பாஷையிலே
என் பிள்ளை கஷ்டத்திலே என்ன செய்றானோ தெரியலையே
குளிர் என்று அறிந்தேனே போர்வயுண்டோ தெரியலையே ....

நாளை எடுக்கும் பிச்சையிலே நிறைய பணம் சேர்ந்தாலே
முருகா உன் கோயிலிலே முன் வாசல் உண்டியலிலே
போட்டிடுவேன் சரவணனே என் மகனின் கஷ்டங்களே
அத்தனையும் போக்கிடவே அருள் புரிவாய் ஆண்டவனே

தினமும் என் கனவினிலே சிரிக்கின்றாய் இரவினிலே
சிரிப்பேன் அந்த நினைப்பினிலே பொழுதெல்லாம் என் மகனே
உயிர் பிரிந்தால் என் உடலினிலே மகனே நீ கலங்காதே
நீர் வந்தால் உன் கண்களிலே என் ஆன்மா செல்லாதே ...

சிந்து சிவசங்கர் .

No comments:

Post a Comment