பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

இசைந்தாள் அவளும் இருதயம் கொடுக்க

16.இசைந்தாள் அவளும் இருதயம் கொடுக்க... !!!

இவளின் அழகினை
இவனும் ரசிக்க
இன்னிசை கேட்டு
இன்பத்தில் மிதக்க
இமயத்தில் அமர்ந்து
இருப்பதாய் நினைக்க
இடைவெளி இன்றி
இருவரும் பார்க்க...

இல்லையென தோணும்
இடுப்பினை அசைக்க
இரவினில் வண்டுகள்
இசைகளை மீட்க
இதமான காற்றினில்
இலைகளும் சிலிர்க்க
இசைந்தாள் அவளும்
இருதயம் கொடுக்க...

இரத்தின கல்லென
இனியவள் ஜொலிக்க
இவளே உயிரென
இனியவன் நகைக்க
இயக்கமே இன்றி
இயல்பினை தொலைக்க
இயலுமோ காதலை
இன்றும் மறக்க...

இரத்தொன்று காதலின்
இடையினில் குதிக்க
இவனே மூச்சென
இருந்தவள் பதைக்க
இப்படி அப்படி
இன சனம் கதைக்க
இடர்கள் முளைத்தது
இவர்களை பிரிக்க...

இதயத்தின் துடிப்பது
இடியென முழங்க
இயற்கையின் மழை போல்
இரு விழி நனைக்க
இறகுகள் ஒடிந்ததாய்
இளங்குயில் துடிக்க
இரையின்றி அடிக்கடி
இரைப்பையும் தவிக்க...

இமையென நினைத்த
இறைவனும் ஒழிக்க
இளகிய மனசும்
இரும்பாய் விரைக்க
இழவொன்று விழுந்ததாய்
இடமே சலிக்க
இன்முகம் காட்டி
இல்லமும் பகைக்க...

இருந்தது இருந்த
இடத்தினில் கிடக்க
இருட்டினில் அப்புவின்
இருமலும் கேட்க
இக்கரை தனிலே
இளையவன் முறுக்க
இழந்தவள் இதயம்
இறப்பினை அணைக்க ...

இங்கிதம் இல்லா
இருப்பவர் இருக்க
இரனியர் பிறப்பில்
இவர்களும் பிறக்க
இறுகிய மனத்தவர்
இவ்விடம் நிலைக்க
இஷ்ட தெய்வங்கள்
இல்லையோ தடுக்க...

இம்சை அரசர்கள்
இருப்பிடம் தகர்க்க
இயம்பினால் போதும்
இங்கேயே மரிக்க
இரக்கத்தை மறந்த
இம்மண்ணை துதிக்க
இணக்கமும் உண்டோ
இலக்கணம் படைக்க!!!

No comments:

Post a Comment