பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Thursday, 9 June 2011

புதிரானவள்

புதிரானவள்


புயல் போல் தெரிவது அவள் சுபாபம்

பொன்னகை அணியாத புன்னகை தான் அவள் நகையே

கண்ணில் மை இல்லை களங்கமில்லா பார்வையானவள்

பொய் சொல்லத்தெரியாத புதுமையானவள்

புகழ்ச்சி என்றும் இவளை நெகிழ்ச்சிகொள்ள வைத்ததும் இல்லை

புகழாரம் கண்டு இவள் என்றும் மயங்கியதும் இல்லை

அநீதியை கண்டு கொதிப்பதில் பெண்களுக்கே நீதிபதி

வாழ்வை அனுபவித்துப்படித்தவள் இன்பமாக இன்றுவரைக்கும்

இயலாமை என்பதற்கு அர்த்தமே தெரியாத இறுமாப்பு இவளே

பல காலம் பழகியும் படிக்க முடியாத புதிரானவள்

என் இதயத்தில் அசைக்கமுடியாத இரும்புக்கோட்டையும் இவளே!!!

கவிஞர் இராஜேந்திரகுமார்

No comments:

Post a Comment