
புயல் போல் தெரிவது அவள் சுபாபம்
பொன்னகை அணியாத புன்னகை தான் அவள் நகையே
கண்ணில் மை இல்லை களங்கமில்லா பார்வையானவள்
பொய் சொல்லத்தெரியாத புதுமையானவள்
புகழ்ச்சி என்றும் இவளை நெகிழ்ச்சிகொள்ள வைத்ததும் இல்லை
புகழாரம் கண்டு இவள் என்றும் மயங்கியதும் இல்லை
அநீதியை கண்டு கொதிப்பதில் பெண்களுக்கே நீதிபதி
வாழ்வை அனுபவித்துப்படித்தவள் இன்பமாக இன்றுவரைக்கும்
இயலாமை என்பதற்கு அர்த்தமே தெரியாத இறுமாப்பு இவளே
பல காலம் பழகியும் படிக்க முடியாத புதிரானவள்
என் இதயத்தில் அசைக்கமுடியாத இரும்புக்கோட்டையும் இவளே!!!
கவிஞர் இராஜேந்திரகுமார்
No comments:
Post a Comment