பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Wednesday, 15 June 2011

பொக்கிஷம்

பொக்கிஷம்


*பெருமைகள் தேடி வந்தபோதும்

பொறுமைகள் காத்தவன் நீ..

வறுமைகள் வாட்டிய போதும்
வாடாத கொள்கையாளன் நீ..

துன்பங்கள் உன்னை துரத்தியபோதும்
துவளாத துணிச்சல்காரன் நீ..

சான்றோர் கூடிய சபையில்
வாழ்ந்த ஆன்றோன் நீ..

கடமை தவறா கண்ணியமான
கரிகால வேந்தன் நீ..

பெண்மைக்கு இலக்கணம் தந்த
நன் இலக்கியவாதி நீ..

ஆண்மைக்கு என்றும் ஒரு
அழியா இலக்கியம் நீ..

பாசத்தில் உனை வெல்ல
பச்சிளம் குழந்தை நீ..

போரில் விளையாடும் வீர
தமிழ் புலி நீ..

பாரில் உனக்கு என்றும்
நிகர் நீயே நீ..

ஈன்ற மகனை இனத்திற்க்குதந்த
உம்மை .....வர்ணிக்க இயலாதவன் .......நீ.........
எங்களின் மாபெரும் பொக்கிஷம் நீ*


............*தம்பி*....

No comments:

Post a Comment