பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Friday, 10 June 2011

அலைகள் ஓய்வதில்லை.

அலைகள் ஓய்வதில்லை.


அந்த அலைகள் கரைக்கு வெறும் காட்சிகளே. கரை சலனமோ சஞ்சலமோ படுவதில்லை. வெறும் ஜடப் பொருளாக இருந்து அலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது.
இப்படித்தான் நானும் இருக்கின்றேன். எப்படி?! ஆயிரமாயிரம் என்ன அலைகள் என் உள்ளமெனும் கரையை ஓயாமல் வந்து மோதிக் கொண்டே இருக்கின்றன.அந்தக் கரையைப் போலவே நானும் சும்மாயிருக்கின்றேன்.வந்து வந்து மோதும்

முடிவிலா அலைகள்

பார்வயாலனகக் கரை



ஆயிரமாயிரம் எண்ணங்கள்

பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்

பதிவு செய்யாமல் நான்

முரண்



கரையை மோதும் அலைகள் ஒவ்வொரு நாளும் கரையில் புதிய மாற்றங்களைச் செய்து கொண்டே உள்ளன.கரையை உடைத்து, அரித்து , கரைத்து, அழித்து என்று பல மாற்றங்கள்.





இப்படித்தான் நானும் இருக்கின்றேன். ஆயிரமாயிரம் என்ன அலைகள் என் மனக் கரையை மோதிச் செல்கின்றன.ஒவ்வொன்றிலும் நான் பாதிப்பைச் சந்திக்கின்றேன். அன்பு, பாசம், கருணை, சோகம், கோபம், தாபம், ஆத்திரம், மானம், விருப்பம், காமம் என்று என்ன அலைகள் என்னைப் படுத்தும் பாடு, அப்பப்பா சொல்லி மாளாது. அலைகளைக் கரை என்ன செய்ய முடியும்? எண்ணங்களை மனம் நிறுத்த முடியுமா?!!


துரை முருகன்

No comments:

Post a Comment