
வாழ்வில் கொடியதும் வெறுமையும் கொண்டதே.
எத்துணையும் இல்லை இனிமையும் காணோம்.
எதற்க்காக இந்த நிலையற்ற வாழ்வு.
புரியாத மனிதரிடம் புழுவாக துடிக்கின்றேன்.
புரிந்து தான் அவர்கள் என்ன செய்தார்கள்.
காலமும் நினைவுகளும் நிரந்தரம் இல்லையே.
கனவுகள் சிதைந்து கண்ணீர் மட்டும் மிஞ்சியதே.
ஏன் இந்த கொடிய நிலை எனக்கு மட்டும்.
புள்ளி மான் மாதிரி துள்ளி திரிந்த என்னை.
தள்ளி வைத்து அழகு பார்ப்பது ஏன் தானோ.
காற்றலைகள் ஒன்று சேர்கின்றதே,
இந்த அபலை வாழ்வு தான் எப்போ?
கவிஞர் இராஜேந்திரகுமார்
No comments:
Post a Comment