
பிறப்புக்க்ம் இறப்புக்குமான இடைவெளியை
சிறப்பிக்கும் ஒரே செயல் – சிரிப்பு ,
அகத்தில் தோன்றும் நினைவுகளின்
புற வெளிப்பாடு – சிரிப்பு
முகத்தை அழகாக்கும் ஒரு
அழகு சாதனம் – சிரிப்பு ,
சிரித்து பார்,
சிறகுகள் முளைக்கும் ,
இறகுகள் விரியும்,
சிறகுகளை விரித்து சந்தோஷ
வானில் பறக்க எத்தனிப்பாய்,
கார்மேகுத்துள் ஒளிந்து கண்ணாமூச்சி
ஆடும் கதிரவனை நீ ரசிப்பாய் ,
என்றும் ஒன்றாய் கூடி களிக்கும்
பறவை கூட்டத்தின் ஒற்றுமையை கண்டு வியப்பாய் ,
நீரோடையின் சலசலப்பில்
புதுராகங்கள் கேட்டுணர்வாய் ,
கருநீலசாலையில் நட்சத்திர
பூக்களை எண்ணி நகைப்பாய் ,
படபடக்கும் பட்டாம்பூச்சியை பார்க்கையிலே
பரபரக்கும் இந்த உலகை நீ மறந்திடுவாய் ,
பச்சை கம்பளம் விரித்த வயல் வெளிபோல
உன் எண்ணங்கள் பசுமையாகும்,
வாஞ்சையுடன் தலை கோதும் தாயின்
அரவணைப்பை சிரிக்கையிலே நீ உணர்வாய் ,
மழலையின் அழகு சிரிப்பு
மகுடத்தில் உன்னை ஏற்றும் ,
அரும்பு மீசை சிரிப்பு
உன் பருவத்தை எடுத்துக்காட்டும் ,
தனிமையில் சிரிப்பு
உன் காதலை உலகுக்கு எடுத்துரைக்கும்,
பொக்கை வாய் சிரிப்பு
அன்பின் அடையாளமாய் விளங்கும்,
வெற்றியில் மௌன சிரிப்பு
உன் புகழை பாடும்,
தோல்வியின் கோப சிரிப்பு
உன்னை செதுக்கி சிலையாக்கும் ,
ஏளன சிரிப்பை மட்டும் நீ விட்டொழி
அது உன்னை மனிதனாக்கும்,
பூக்களின் சிரிப்பு கணிகளின் பிரசவத்தில் ,
ஏழையின் சிரிப்பு
புரட்சியின் வெற்றி திலகம்,
அடிமையின் சிரிப்பு
சுதந்திரத்தின் வெளிப்பாடு ,
காலத்தின் சிரிப்பு மரணத்தின் அத்தியாயம்……:):):):):):):):):)
by karthikraghavendran
No comments:
Post a Comment