பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Saturday, 11 June 2011

சிரிப்பு

சிரிப்பு



பிறப்புக்க்ம் இறப்புக்குமான இடைவெளியை

சிறப்பிக்கும் ஒரே செயல் – சிரிப்பு ,

அகத்தில் தோன்றும் நினைவுகளின்

புற வெளிப்பாடு – சிரிப்பு

முகத்தை அழகாக்கும் ஒரு

அழகு சாதனம் – சிரிப்பு ,

சிரித்து பார்,

சிறகுகள் முளைக்கும் ,

இறகுகள் விரியும்,

சிறகுகளை விரித்து சந்தோஷ

வானில் பறக்க எத்தனிப்பாய்,

கார்மேகுத்துள் ஒளிந்து கண்ணாமூச்சி

ஆடும் கதிரவனை நீ ரசிப்பாய் ,

என்றும் ஒன்றாய் கூடி களிக்கும்

பறவை கூட்டத்தின் ஒற்றுமையை கண்டு வியப்பாய் ,

நீரோடையின் சலசலப்பில்

புதுராகங்கள் கேட்டுணர்வாய் ,

கருநீலசாலையில் நட்சத்திர

பூக்களை எண்ணி நகைப்பாய் ,

படபடக்கும் பட்டாம்பூச்சியை பார்க்கையிலே

பரபரக்கும் இந்த உலகை நீ மறந்திடுவாய் ,

பச்சை கம்பளம் விரித்த வயல் வெளிபோல

உன் எண்ணங்கள் பசுமையாகும்,

வாஞ்சையுடன் தலை கோதும் தாயின்

அரவணைப்பை சிரிக்கையிலே நீ உணர்வாய் ,

மழலையின் அழகு சிரிப்பு

மகுடத்தில் உன்னை ஏற்றும் ,

அரும்பு மீசை சிரிப்பு

உன் பருவத்தை எடுத்துக்காட்டும் ,

தனிமையில் சிரிப்பு

உன் காதலை உலகுக்கு எடுத்துரைக்கும்,

பொக்கை வாய் சிரிப்பு

அன்பின் அடையாளமாய் விளங்கும்,

வெற்றியில் மௌன சிரிப்பு

உன் புகழை பாடும்,

தோல்வியின் கோப சிரிப்பு

உன்னை செதுக்கி சிலையாக்கும் ,

ஏளன சிரிப்பை மட்டும் நீ விட்டொழி

அது உன்னை மனிதனாக்கும்,

பூக்களின் சிரிப்பு கணிகளின் பிரசவத்தில் ,

ஏழையின் சிரிப்பு

புரட்சியின் வெற்றி திலகம்,

அடிமையின் சிரிப்பு

சுதந்திரத்தின் வெளிப்பாடு ,

காலத்தின் சிரிப்பு மரணத்தின் அத்தியாயம்……:):):):):):):):):)


by karthikraghavendran

No comments:

Post a Comment