
நான் யார் தெரியுமா ?
ஆமாம் உங்களுக்கு தெரியும்
நான் யார் என்று ..
எனக்கும் தெரியும்
இருந்தாலும் சொல்கிறேன் கேளுங்கள் ...
சூரியன் அஸ்தமிக்கும் அதி காலையில்
பின்பு மறைந்து கொள்ளும் அது மாலையில்
ஓய்வெடுக்கும் போல
சில மணி நேரம் கண்ணில் படுவதே இல்லை ...
நிலவு ஒளிதரும் பாதி மாதம்
ஒழிந்துக் கொள்ளுமோ மீதி மாதம்
அதற்கும் ஓய்வு தேவை போல
மூவைந்து நாட்கள் எங்கே போகின்றது ...?
காற்று கூட விட்டு விட்டு தான் வந்துரசும்
காற்றை உணராத நேரங்கள் அதன் ஓய்வு நேரம் போல
சில நேரங்களில் மறைகின்றதே ...
ஆனால் நான் ஓய்வே எடுப்பதில்லை
மற்றவர்க்காக உழைப்பதே என் முக்கிய வேலை
ஆனால் அதுவே என் சந்தோஷம்
நான் என் தொழிலை தெய்வமாய் மதிக்கிறேன் ...
சில நேரங்களில் எனக்கு உடல் நிலை பாதிக்கும்
அப்ப கூட நான் வேலை பார்க்க தான் இஷ்ட படுவேன்
என் எஜமானிகள் விட மாட்டார்கள் எனக்கு சிகிச்சை அளிப்பார்கள்
அவசர பட்டு அவர்கள் நல்லவர்கள் என்று எண்ணாதீர்கள்
நஷ்டம் வந்திடுமே என்ற பயம் ....
தினமும் நான் வேலைக்கு செல்கையில்
பலதரப்பட்ட மனிதர்களை காண்கின்றேன்
தத்தி தாவும் பாலகனும்
தள்ளாடும் பாட்டனும்
பூச்சூடிய பூவையும்
மீசைமுறுக்கும் இளைஞனும்
தலையை நீவும் அம்மாவும்
தட்டி கொடுக்கும் அப்பாவும்
பட்டை போட்ட சாஸ்திரியும்
சிலுவை சுமந்த மத குருவும்
பிச்சை எடுக்கும் ஆண்டியும்
அங்காங்கே திருடரும்
நயவஞ்சக காரனும்
கண் தெரியா குருடனும்
காது கேளா செவிடனும்
பொய் சொல்லும் புளுகனும்
உண்மை பேசும் நல்லவனும்
சொல்லி சொல்லி அலுத்திடும்
எத்தனையோ இன்னும் இன்னும் .....
உணர்வு எனக்கு இல்லை என்பார்
இருப்பவர் இங்கு உணர்பவரா ?
சிரிப்பெனக்கு வருவதில்ல
சிரிப்பவர் எல்லாம் நல்லவரா ...?
கண்ணீரும் வருவதில்லை
அழுவதனால் என்ன பயன் ...?
ஜாதி மதம் பார்ப்பதில்லை
பேதம் என்றும் அறிந்ததில்லை
உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும்
ஒரே நிலையில் வைத்திடுவேன்
நான் முற்போக்கு வாதியல்ல ...
நான் யோக்கியவானில்லை
நானும் பல குற்றங்கள் செய்திருக்கிறேன்
ஆனால் இதுவரை அதற்காக தண்டனை அனுபவித்ததில்லை
அது கூட என் குற்றமில்லை
யாரும் எனக்கு தண்டனை வழங்கவில்லை ...
தண்டனை என்றதும் தான் நான் சொல்ல வந்த கதை
என் மனதில் நிழலாடுகிறது
அதிகாலையில் தினமும் நான் வேலைக்கு செல்கையில்
அவளை பார்ப்பேன் ஆஹா அழகானவள்
இப்படி நானே வியக்கும் அளவு அழகானவள் அவள் ..
அவள் என்னோடே வந்து போவாள்
ஆனால் நான் பேசியதே இல்லை
அவளை பார்க்கும் போதெல்லாம்
அவள் கை முதல் முதல் என்னை தொட்ட நாள் நினைவுக்கு வரும் ...
தினமும் தான் அவள் என்னை தொட்டு தொட்டு பேசுகிறாள்
ஆனாலும் அந்த முதல் நாள் ஏனோ நினைவை விட்டு செல்லவில்லை
அவள் தொடுவதென்னவோ என்னை தான்
ஆனால் அவள் பேசுவது என்னோடல்ல
ஒரு ஆடவனுடன் பேசுவாள் ..
அந்த ஆடவனை அடிக்கடி பார்க்கின்றேன்
அந்த அழகியுடன் மட்டுமல்ல பல அழகிகளுடன் ...
அவள் அதை அறிந்திருக்க நியாயமில்லை
சொல்லி விட எனக்கும் வாய் இல்லை ....
மௌனித்துக் கொள்கிறேன் ...
திடீரென்று ஒரு நாள் அவளை பார்கிறேன்
சோகமே வடிவாய் அழுது வீங்கியஅவளது அழகிய விழிகள்
கண்ணீரை துடைத்து துடைத்து சிவந்து போன கன்னங்கள் ...
இடை இடையே கேட்கும் விசும்பல் ..பரிதாபமாய் இருந்தாள்....
வழமை போல என்னை தொட்டதும்
உணர்ந்தேன் அவள் உடல் கொதிப்பதை பதறினேன்
அது அவளுக்கு தெரியவில்லை
அவள் உடலும் மனதும் நொந்து போனவளாய் காணப்பட்டாள்
எனக்குள்ளே நான் அழுது கொண்டேன் ...
மாலை நேரம் பொழுது சாய்ந்து கொண்டிருந்தது
நான் வேகமாய் வந்து கொண்டிருந்தேன்
அப்போது எதிரில் ஓர் உருவம்தள்ளி போ தள்ளி போ கூக்குரலிடுகிறேன்
யோசிக்கிறேன் என் மூளைக்கு எட்டவில்லை ...எ
ன் மீது மோதி மறைந்தது அந்த உருவம்
வீலென்று ஒரு சத்தம்
அதிர்ச்சியோடு நான் செல்கிறேன் ...........
மறு நாள் நான் வேலைக்கு செல்கிறேன்
போகும் வழியில் ஒரே கூட்டம் எட்டிப் பார்க்கிறேன் ..
ஒரு கணம் ஆடிப் போகிறேன் ...
என் அழகி இரத்த வெள்ளத்தில் இரு கைகளும் இல்லாமல் ...
பார்த்துக் கொண்டே சென்றேன்
என்னை தொட்டு தொட்டு பேசிய கைகள்
அவை இப்பொழுதில்லை
அழவும் முடியவில்லை
பேசவும் முடியவில்லை
யாரோ பேசுவது காதில் விழுகிறது ...
இவன் தான் அடிச்சுட்டு போய்ட்டா
ன்என்னை காட்டி சொல்கிறார்கள்
திடுக்கிடுகிறேன் அய்யோ நானா அவளை போய் நான் எப்படி ...?
அப்போ அந்த உருவம் ....?புரிந்து விட்டது எல்லாம் ...
சோகத்தில் தத்தளிக்கிறேன்
தண்டனை தருவார் என்றால் அதுவும் கிடைக்கவில்லை
என்னை நானே நொந்து கொள்கிறேன்
என்னோடு வருபவர்கள் பலவிதமாய் விமர்சிக்கிறார்கள்
என் அழகியை பற்றி
கொதித்து போகிறேன் ....
அவள் நல்லவள் இல்லை இப்படியும் சொல்கிறார்
அவள் கெட்டு போனவளாம்அப்படியும் சிலர்
காதலிச்சவன் எமாத்திடானாம் அட கடவுளே......
கோபம் தலைக்கேறுகிறது என்ன செய்யலாம்
இனிமேல் இந்த வழியில் செல்ல எனக்கும் இஷ்டமில்லை
மௌனிக்க நினைக்கிறேன் நிரந்தரமாய்
அவளை பற்றி அவதூறுகள் பேசுபவருக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்
சிந்திக்கிறேன் ...
இப்பொழுதே இதோ கொடுக்க போகிறேன்
கீழே எட்டி பார்க்கின்றேன்
நான் தப்ப மாட்டேன் மனதுள் பட்டது
அபபடியே குதிக்கிறேன்
இதோ உருண்டு உருண்டு போகிறேன்
சாகிறேன் இனிமேல் வர மாட்டேன் .....
எப்பவும் இரு பாதையில் பயணிக்கும் நான்
முதல் தடவையாய் தடம் புரள்கிறேன்
இதோ இதோ தண்டவாளங்களை விட்டு
முற்றும் முழுதாய் நான் ..சுக்கு நூறாய் போகிறேன் ...
அவளை கொன்றதுக்கு நானே கொடுத்துக் கொள்கிறேன் எனக்கு தண்டனை
கடைசி மூச்சுடன் நினைத்துக் கொள்கிறேன் அவளை....
ஈன குரலில் யாரோ சொல்கிறார்கள்
ரயில் புரண்டு போகுது ...ஒண்டும் மிஞ்சாது .....
தட தடக்கும் நான் இன்று மௌனித்து விட்டேன் ...
சிந்து சிவசங்கர்
No comments:
Post a Comment