பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 14 June 2011

*மணநாள் காணும் எங்கள் முகநூல் தோழிக்கு

*மணநாள் காணும் எங்கள் முகநூல்
தோழிக்கு எங்களின் மனமார்ந்த
வாழ்த்துக்கள்!!.....

மணநாள் கண்ட இன்பம் எந்நாளும்
கண்டு மழலைசெல்வங்களுடன் மகிழ
வாழ்த்துக்கள்!!.....

மன்னவர் பார்வையில் என்றும் மங்காத
திருவிளக்காய் எந்நாளும் மின்னிட
வாழ்த்துக்கள்!!.....

வள்ளுவன் வகுத்த முப்பலின் வழியில்
எந்நாளும் தமிழ்இலக்கணமாய் வாழ
வாழ்த்துக்கள்!!.....

பாரதியின் செல்லமா வள்ளுவனின் வாசுகி
போல எந்நாளும் இணைந்திருக்க
வாழ்த்துக்கள்!!.....

நாளை வரலாறு கூறட்டும் *பாபிராஜன்*
போல இன்பத்திலும் துன்பத்திலும்
இணைந்து வாழவேண்டும் என்று
வாழ்த்துக்கள்!!!!............பாசத்துடன் * தம்பி

*ஒ...செவ்வானமே சற்று சிதறி போ

*ஒ...செவ்வானமே சற்று சிதறி போ


இன்று எங்கள் தோழன் *சே* பிறந்ததினம்..
இவன் பிறந்ததால் புரட்சி பிறந்ததா அல்லது
புரட்சி பிறந்ததால் இவன் பிறந்தானா சற்று
சொல்லி விட்டு போ!!.......

ஒ...மழைமேகமே சற்று மழைதூவி போ
இன்று எங்கள் மாவீரன் *சே* பிறந்ததினம்..
இவன் குருதிப்பட்டு தேசம் சிவந்ததா அல்லது
தேசம் சிவந்தால் இவன் குருதிப்பட்டதா சற்று
சொல்லி விட்டு போ!!.......

ஒ...தென்றல்காற்றே சற்று ஒய்வு எடுத்துக்கொள்
இன்று எங்கள் புரட்சிபுயல் *சே* பிறந்ததினம்..
இவன் புயலானதால் புரட்சி ஏற்பட்டதா அல்லது
புரட்சி ஏற்பட்டதால் இவன் புயலானானா சற்று
சொல்லி விட்டு போ!!......

ஒ...மலைக்குன்றுகளே சற்று சிரம் தாழ்த்துங்கள்
இன்று எங்கள் சிந்தனையாளன் *சே* பிறந்ததினம்..
இவன் தோன்றியதில் உங்களுக்கு பெருமையா அல்லது
உங்களிடம் அடக்கமானதில் உங்களுக்கு பெருமையா சற்று
சொல்லி விட்டு போ!!.......

ஒ...ஒடுக்குமுறையாளர்களே ஒருநிமிடம் யோசித்து சொல்லுங்கள்
இன்று எங்கள் ஒடுக்கபட்டவர்களின்தோழன் *சே* பிறந்ததினம்..
இவன் பிறந்ததால் ஒடுக்குமுறை தகர்ந்ததா அல்லது
இறந்ததால் ஒடுக்குமுறை தகர்ந்ததா யோசித்து சற்று
சொல்லி விட்டு போ!!.......

ஒ...என் உயிர் தோழனே எங்கேநீ
இன்று என்னுள்புரட்சி ஏற்படுத்திய நீ பிறந்ததினம்..
என்னிடம் மட்டும் சொல்லி விட்டு போ....என்று
நீ மீண்டும் பிறப்பாய்!!!

*......... ...*தம்பி* ...............