பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Thursday, 9 June 2011

நீதி

நீதி


இதயம் இல்லா ஊரிலே நீதி உள்ள மனிதரா.
தேசம் விடிகின்றது நாசம் தொடங்குகின்றது.
பாசம், வார்த்தையிலே மட்டுமே பொழிகின்றது.
கொடியவன் கைகளில் தானே நீதி செத்து மடிகின்றது.
பாசாங்கு செய்பவன் வாழ்வு தானே உலகையே ஆள்கின்றது.
கேடுகெட்ட மனித இனம் பாவத்தை செய்கின்றதே போட்டிபோட்டு.
எவனிடம் நீதி கேட்ப்போம் எல்லாமே அநீதி தானே.
பணம் படைத்தவனிடம் வாய் பிளந்துதானே நிக்கின்றார்கள் நீதிமான்கள்.
கடவுள் பெயரைச்சொல்லியே கயவத்தனம் செய்யும் மனிதா,
சிந்தித்து பார் சிதை ஏறிய பின்பும் உன் நாமம் வாழுமா?
பிறந்த பயனாக ஒரு நன்மையாவது செய்யடா ??

கவிஞர் இராஜேந்திரகுமார்

No comments:

Post a Comment