பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Thursday, 9 June 2011

அவளுக்கு என்னாச்சு

அவளுக்கு என்னாச்சு


காலையிலே மலர்கின்றாள் மாலையிலே சுடுகின்றாள்

பாதையிலே நடக்கின்றாள் பதட்டத்தில் பேசுகின்றாள்

நித்தம் என்னைக்கானாது வெறி பிடித்து பித்தாகின்றாள்

கண்டுவிட்டால் காயப்படுத்தி விடுகின்றாள்இதயத்தை

ஏதோ போக்கில் போனவனை தனக்குள் அடக்கிகொண்டவள்

தயங்கிய போதெல்லாம் அணைத்துக்கதை பேசியவள்

இன்று அவளில் ஒரு தடுமாற்றம் இல்லை தனிமாற்றம்

என்னை சோதித்துப்பார்க்கின்றாளா ?துரத்த பார்க்கின்றாளா?

மனதில் ஒரு நெருடல் என்னையறியாது ஒரு ஏக்கம்

கற்பனை உலகில் என்கதை முடிந்துவிடுமோ?

ஏன் இந்தக்கலக்கம்நினைத்துப்பார்க்க முடியவில்லை

அவளின்றி என்பயணம்???

கவிஞர் இராஜேந்திரகுமார்

No comments:

Post a Comment