பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Thursday, 6 October 2011

hi halooo

கருவிழிகள் பகைவருக்கு
பயமூட்டும் பாயும்புலிகள்
பகைமுடித்து படைநடத்தி
எங்களை தலைநிமிர
செய்த தமிழ்க்குடிகள்!!.....

பாரெங்கும் படைநடத்தி
எம்பாட்டன் நாட்ட
புலிக்கொடியை தாங்கி
ஈழதேசம் காண
இன்னுயிர் தந்த
எங்கள் ஈழவேந்தர்கள்!!.....

வாளெடுத்து போர்நடத்தி
வானுயர்ந்த சோழன்வழியில்
வான்படை கண்டஎம்
தலைவன் நெறியில்
காந்தள் பூசூடி களமாடும்
எங்கள் காவல்தெய்வங்கள்!!.....

மண்ணில் மாணுடம்
மறைந்தாலும் மறையாது
உங்கள் மாண்மைபொருந்திய
மாவீரம் என்றென்றும்
மற்றவர்களுக்கு அதுவே
வரலாற்று பாடம்!!!*.....*தம்பி*.....

மேலும்

No comments:

Post a Comment