பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Saturday, 11 June 2011

கேள்விகள்

கேள்விகள்



நதியோடு மழை கொண்ட நட்பை

யார் அறிவர்,

மழை மண்ணோடு பேசும் பாஷையை

யார் அறிவர்,

பூவோடு வண்டு கொண்ட உறவை

யார் அறிவர்,

அவரே என்னுள் நீ யார் என்று

உனக்குரைப்பார் ,

புரியாத பல கேள்வியை என்னுள் நீ எழுப்பிவிட்டாய்,

கேள்வியே புரியாமல் பதிலை நான் தேடுகிறேன்

No comments:

Post a Comment