பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Wednesday, 15 June 2011

வா என்அன்பு தங்கையே

வா என்அன்பு தங்கையே


*வா என்அன்பு தங்கையே

நாம் விடிய விடிய

விளையாடிய வீதிகள் நம்மை

தேடுது!!....


வெள்ளை மணல் வெளியில்

விளையாடி திரிகையில் துள்ளி

வந்தஅலை நம்மை காணாமல்

தேடுது!!....


பள்ளி போகையில் பாதையில்

திரியும் வெள்ளை ஆட்டுக்குட்டி

உன் துள்ளல்நடை காணாது

தேடுது!!....


கோயில் வாசலில் சாய்ந்து

நிற்கும் நாவல் மரம்

உன் பட்டுகைகள் படாததால்

தேடுது!!....


இதோ நானும் அம்மா

அப்பாவும் வாசல் நோக்கி

வந்து வந்து போகிறோம்

உன்னை தேடி!!....


ஆனால் நீயோ எங்களை

மறந்து போனதேனோ காலன்

பிடியில் கண்கள் கண்ணீரில்

தேட!!!*

.........*தம்பி*........

No comments:

Post a Comment