
நூறாயிரம் தீபங்கள்
சுடர் விட்டெரிய
நிரந்தர நித்திரையில்
ஆழ்ந்திருக்கும்
மாவீரரேனும்
உயிர் பூக்களே ...
கடந்து போனது
காலங்கள் தான்
நீங்கள் அல்ல ...
உங்கள் செயல்களினால்
இன்னும் இம்மண்ணில்
வாழ்கிறீர்கள் ...
உங்கள் வாழ்க்கை
சரித்திரத்தை
அசை போடுமளவிட்கு
நாங்கள் உயர்ந்தவர்கள் அல்ல ..
எனினும் நினைத்துக்
கொள்கிறோம் உங்களை ...
நளினமான உங்கள் இளமையினை
விவாகரத்து செய்து விட்டு
முதுமையின் மனோபாவத்தை
மணம் முடித்து கொண்டீர்கள் ...
சபலத்திலும் சலனத்திலும்
உபாதையுரும் மனித மனங்களுக்கு
வாழ்க்கை என்பதன்
வரைவிலக்கணம் ஆனீர்கள் ...
நெஞ்சில் உருக்கொள்ளும்
ஆசைகளை புறந்தள்ளி
களத்தினில் காவியமானீர்கள் ...
குரிப்பிழந்து கடந்து போய்விட்ட
காலக் கணக்குகளை
சிதைவுற்று சிதிலமடைந்த
ஞாபக பதிவேடுகளில்
பதித்து விட்டீர்கள் ....
யௌவன நினைவுகளை
அசை போட்டு
அல்லாடிக் கொள்ளும்
பருவம் வரும் முன்பே
பட்டுப் போனீர்கள் ...
அரக்கர்களால் மாய்ந்து
மயானமாகிப் போன
மன ராஜ்ஜியத்தில்
போராட்டத்தை
நிலை நிறுத்தி விட்டீர்கள் ...
பருவத்துக்கு ஏற்ற
அன்பு பாசங்கள்
கருக்கொள்ளும்
மனசுக்கு சுருக்கு மாட்டி
உங்கள் முடிவில்
முழுமை பெற்றீர்கள் ...
தீரா துயரில் நம்மவர் தவிக்க
இருண்ட நீல வானில்
நட்சத்திரங்களாய்
கண் சிமிட்டி சிரிக்கின்றீர்கள் ...
இனி வரும் எங்கள்
யுகங்களிலேனும்
விடுதலையோடு
பூரித்து புளங்காகிதம்
கொள்வீர்கள்
மறு ஜென்மங்களாய் வந்து ...
உங்களை எண்ணி எண்ணி
வானத்தை நோக்குகையில்
ஒன்றே ஒன்று புரிந்தது ...
உயிர் பூக்களே ................!
நிஜமாகவே நீங்கள்
அதிசயமாய் தோன்றும்
துருவ நட்சத்திரங்கள் தான் ...!!!
ஆம் வானில் தோன்றும்
ஒற்றை துருவ நட்சத்திரம் அல்ல ...
எங்கள் மனவானில் தோன்றி மறையும்
நூறாயிரம் துருவ நட்சத்திரங்கள் ...,,!!!!!.
நன்றி சிந்து
No comments:
Post a Comment