
அந்த மலரின் விழியில் இருந்து
ஒரு நீர்த்துளி தரையை தொட்டது ...!
அந்த நிலவு மழை பெய்ததோ...?
நீர்த்துளி தன்னை தொட்டதும்
சிலிர்த்துக் கொண்டது தரை ...!
சில நேரம் மெல்லாளின்
இதையத்தை படித்திருக்குமோ...?
தரை சிலிர்த்ததால் ஒருவன்
பதை பதைத்தான்...!
நிலவின் அன்புக்குரியவனோ ...?
அவள் விழி ஈரத்தை கண்டு
துடி துடித்தது அந்த மீசை ...!
அந்த இரவில் வானில் துடித்து மறையும்
நட்சத்திரங்களையும் விட வேகமாய் ...!
வெறும் அன்பினால் மட்டும் தானோ ...?
அது... நட்பா ...? பாசமா...? காதலா ...?
அவள் அறிந்திருக்கவில்லை ...!
அறிய முற்படவும் இல்லை ...!
அவளுக்காக ஓர் இதயம் துடிப்பதை
அவள் வரமாக நினைத்தாளோ...?
ஆம் அவள் அறிந்திருந்தால்
கருங்கட்பாரையும் கசிந்து விடும்
அவன் காட்டும் அன்பினால் ...!
இருண்ட வானமும் ஒளி தரும்
அவனது பாசத்தால் ...!
வற்றிய கிணற்றிலும் நீர் ஊரும்
அவனது நட்பினால் ...!
போகத்துடிக்கும் அவளது உயிருக்கு
அவனது கைகளால் விஷத்தை தந்தாலும்
அவள் பருகிடுவாள் காதலுடன் ...!
அந்த உயிர் பூ மீண்டும் பூக்கும்
விஷம் அவன் தந்தால்...!
ஆம் அவளுக்கு தெரியும்
அவன் அவளுக்கு உயிருக்கும் மேல் என்று ...!!!
தொகுப்பு : சிந்து சிவசங்கர் .
No comments:
Post a Comment