
அடிமைகளாய் வாழ்ந்தோம் எம்மண்ணில்
அதை தடுக்க தான் நல்லதோர் திருநாளாம்
கார்த்திகை இருபத்தாறாம் நாள்
வந்துதித்தாயோ இம்மண்ணில்....
உன் முகவரி விளங்க நின்ற வீடும்
அளவில்லா புகழ் வாய்ந்த நாடும்
ஈழம் எனும் தமிழரின்
வீடும் நாடுமாய் இருந்ததே ...
வானமும் வயலும் வீதியும் வாவியும்
உயிர்களும் மரங்களும் காற்றும் மணலும்
எஞ்ஞான்றும் ஏற்றமுற எழுந்து நின்றதே
நீ சொல்லும் ஒரு சொல்லில் ....
இணையில்லா பீடு பெற்ற ஈழத்தின் வேந்தனே
அயல் நாட்டு அரசியலும் அளவளாவும் அளவு
நயத்தகு நாகரீகம் கொண்ட
நல்லவனாம் நகைமுகனாய் இருந்தாயே ...
யார் உன்னோடு சமர் புரிய வரினும்
உன் துப்பாக்கி குவித்ததே நினக்குன்று
வீரத்தை உன் வாகை காட்டியதே
நெஞ்சின் ஈரத்தை உன் ஈகை காட்டியதே ...
விரிந்த மார்பும் வீங்கிய தோளுமாய்
விளங்கினையே மதப்பு மிகக்கொண்டு
அடங்கல் மடங்கல் ஒடுங்கல் நடுங்கல்
எல்லாம் என்னவேணு அறிந்திருக்க மாட்டாயே ...
உன் பொறி கக்கும் விழிகள் வழங்கும் வாள் முன்னே
வெண்ணிலவும் வெயிலும் வெள்கிப் பொய் தஞ்சமாகுமே
நீ ஆட்ட நினைத்து ஆட்டி இருந்தால்
ஆடிப் போய் இருக்குமே எதிரியின் தேசமெல்லாம் ...
தருக்கேறி தான்தோன்றித் தனமாய் திரிந்தவன் அல்ல
உன்னை திரைந்த பால் என்று சொல்ல ..
தாய் மண்ணை காக்க ஊண் உறக்கம் தொலைத்து
அரை நொடியும் உனக்காக வாழாத உனக்கு இன்று பிறந்த நாள் ...
உன் வீரத்தை விடிய விடிய வர்ணித்தாலும்
தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சமாகி விடும்
காவியமாய் போனாயா ..? காட்டு வழி சென்றாயா ..?
காற்றோடு கலந்தாயா..? நாமறிய வாய்ப்பில்லை ...
ஆனால் உன் நாமம் மட்டும் எங்கள் நெஞ்சில்
என்றும் மறையாமல் ... வாழ்ந்து கொண்டே இருக்கும் ...
ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள் வரினும் அழியா புகழில்
பிரபாகரன் எனும் உந்தன் நாமம் ......என்றென்றும் ...................
சிந்து சிவசங்கர் .
No comments:
Post a Comment