பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Saturday, 11 June 2011

காற்றில் கலந்திடவே

காற்றில் கலந்திடவே



அளவோடு உரையாட
ஆற்றலோடு கதைபேசு
அறிவோடு கைகோர்த்து
நீதியோடு நடை பழகு
திறம்பட செயல்பட
நெறிகளை கையிலெடு
பயிற்சியினை ஆயுதமாக்கு
முயற்சியினை கேடயமாக்கு
தடைகற்கள் தடுத்தால்
தயக்கமின்று எட்டியுதை
எதிரிகள் ஏராளம்
தாமதிக்காமல் சிதைத்திடு
சிந்தித்து பேசிட
சிறிதளவும் மறவாதே
போதனைகளும் வேதனைகளும்விட
சோதனைகளே சாதனைகள்தரும்
அச்சத்தை கண்டு என்றும்
அச்சம் கொள்ளாதே
சந்திக்கும் தோல்விகள்தான்
பயிற்சி முகாம்கள்
படுத்துறங்கு தோல்விகளோடு
நாளை வெற்றிக்காக போராட
காற்றிடம் கற்றுகொள்
அகப்படாமல் போரிட
ஆசானை தேடாதே
உனக்குள் ஒருவன்
ஒளிந்து கிடக்கின்றான்
உள்ளுக்குள் உறுதியோடு
சத்தமின்றி அவனைஎழுப்பு
சுத்தமான வீரனவன்
வெற்றிக்காக ஓடாதே
நீ பைதியக்கரனாவாய்
தோல்விகளுக்கு அஞ்சிடாதே
நீ முடங்கிவிடுவாய்
ஏன் இத்தனை போராட்டம்
எல்லாமே ஒரு கணம்தான்
மூச்சு நின்றால்
மொத்தமும் போச்சு
பின் ஏன் இத்தனை
பயிற்சியும் முயற்சியும்
போராட்டமும் ஏக்கமும்
தோல்வியும் வெற்றியும்
நெறிகளும் நீதிகளும்
எல்லாம் ஓர் நாள்
காற்றில் கலந்திடவே !!!


KARTHIK V RAGHAV

No comments:

Post a Comment