பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Wednesday, 15 June 2011

உறவுகளே இங்கு நான் வேதனையாக இந்த பதிவை பதிவது ரசிக்க அல்ல சிந்திக்க

*உறவுகளே இங்கு நான் வேதனையாக இந்த பதிவை பதிவது ரசிக்க அல்ல சிந்திக்க!!!* .....





*என் அன்பு மகனே ...

அன்று உன்னை சுமந்தேன்

நாளை உன்உறவையும் சுமப்பேன்

சுமையாக அல்ல சுகமாக ...

என் அன்பு மகனே!!....





கருவறையில் இடம் தந்த எமக்கு

உன் வீட்டு சமயலறையிலாவது

இடம் கொடு...

என் அன்பு மகனே!!...





உன் வீட்டில் மிஞ்சிய

உணவை கொடு என்

ஆயுள் முழுதும் உழைப்பை

தருகிறேன் இலவசமாக ...

என் அன்பு மகனே!!....





அம்மாவாக ஏற்காவிட்டாலும்

உன்னையும் உன்வீட்டையும் காக்கும்

காவல் நாயாகவது ஏற்றுகொள்....

என் அன்பு மகனே!!....





போக இடமுமில்லை உன்னை

பிரிய மனமுமில்லை வாழ்ந்துவிட்டு

போகிறேன் இறுதிவரை உன் காலடியில் ...

என் அன்பு மகனே!!....





நாளை உனக்கு என்

நிலை வராது இருக்க

வேண்டிக்கொள்கிறேன் உன் மகனை....

என் அன்பு மகனே!!!!!*...........*தம்பி*....

No comments:

Post a Comment