பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

என் நண்பன்

8.என் நண்பன்!

யாருமே என்னோடு
விளையாட வரவில்லை ..
சோகமாய் வீட்டு
முற்றத்தில் அமர்ந்திருந்தேன் ..

அப்போது தான் அவன் வந்தான் ...
அண்ணார்ந்து அவனை பார்த்தேன் ...
எனக்கு கோபம் கோபமாய் வந்தது ...
விருட்டென்று எழுந்து
வீட்டுக்குள் சென்றேன் ...
வாசலில் நிண்டு எட்டிப் பார்த்தான்
அந்த பார்வை வா விளையாடலாம்
என்பது போல் இருந்தது ...

நானும் விளையாட்டாய்
அறையினுள் சென்று
கதவை மூடிக் கொண்டேன் ...
பரிதாபமாய் ஜன்னல் வழியாய்
எட்டிப் பார்த்தான் ...
எனக்கு சிரிப்பு வந்து விட்டது ...

முற்றத்து தேக்கு மரத்தில்
ஓடி போய் ஒழிந்து கொண்டேன் ...
அங்கேயும் இலைகளுக்கு மறைவில்
நின்று என்னை கண்டு பிடித்து விட்டான் ...

தோட்டத்து வாழை தோப்பில்
மறைந்து கொண்டேன்...
வாழை மரங்களுக்கு நடுவே நின்று
எட்டி எட்டி பார்த்தான் ...

மீண்டும் வீட்டுக்குள்
ஓடி மறைந்து கொண்டேன் ...
மறுப்படியும் வாசலிலும் ... ஜன்னல் வழியும்
எட்டி எட்டி பார்த்தான் ...
பாவமாய் இருந்தது ..

என்ன என்று கேட்டேன்
பொழுது சாய்ந்து விட்டது
நாளை அதிகாலையில்
வந்து விடுகிறேன் என்றான் ...

அவன் முகம் சிகப்பாய் மாறியது வெட்கத்தில் ...
நானும் சரி என்று தலை அசைத்தேன் சோகமாய் ..
என்னை பிரிய மனம் இன்றி
சென்று மறைந்தான் அவனும் ...

அவன் வருகைக்காய் காத்திருந்தேன் நானும் ..
என்னை பார்க்காமல் அவனால் இருக்க முடியாது ...
கண்களை மூடி உறங்கி போனேன் நானும்
அவனையே நினைத்தபடி ...

அதிகாலையில்
அவன் முகத்தில் தான் முழிப்பேன்
வந்து விடுவான் ...
அவன் என்றும் என் நண்பன் வெயில் ....

சிந்து சிவசங்கர் ...!

No comments:

Post a Comment