
பேரனும் பூட்டனும் வாழ்ந்த நம் தேசம் ..
பெற்றோரும் சுற்றோரும் சூழ்ந்திருந்த தேசம் ...
அத்தனுக்கும் அம்மைக்கும் அழுக்கு வரா வண்ணம் .....
ஆற்றுவித்த நம் உயர்ந்த தேசம் ..........
இப்பொழுது எங்கே போயிற்று .............
நெருப்பிலெரிந்து சாம்பலாய்ப் போனதோ ........?
நம் உற்றார் சுற்றார் எங்கே...?
எங்கள் முகவரி விளங்க நின்ற
வீடுகள் எங்கே ..............?
அளவில்லா புகழ் வாய்ந்த ..
நம் ஊர்கள் எங்கே ...?
தெய்வங்கள் குடி இருந்த
கோவில்கள் எங்கே .....?
எல்லாம் நாசமாய்ப் போய்விட்டனவா .....?
காரூரும் வானம் எங்கே ....?
எரூரும் வயல்கள் எங்கே....?
தேரூரும் வீதகள் எங்கே ......?
நீரூறும் வாவிகள் எங்கே .......?
எல்லாமே அழிந்து விட்டனவா ...?
விழிகள் தூங்க மறுக்கின்றன ....
செவிகளில் மரண ஓலங்கள் கேட்கின்றன ...
உறவின் நினைவுகள் உயிரை உருக்குகின்றன .....
இறந்தவர் உறங்கிய கல்லறை சிதற ....
நம்மவர் மூச்சுகள் அதற்குள் அடங்குகின்றன ......
எம்மவர் விதியா காலத்தின் சதியா ...?
இரத்தமும் சதையும் நடைப் பாதைகளாய்ப் போனதேன் ....?
பாரத்தைக் கொடுத்தப் பாவம் பாடைகளை விரித்தேன் ....
விசித்திர வெடி குண்டே உன்னால் நம்மவர் வேருடன் சாய்ந்ததேன் ......?
அடுத்தொரு தலைமுறைக் காணாமல் போனதேன் ......?
நம்மவர் வாழ்க்கை கண்ணீரில் மிதந்ததேன் ........?
மழலைகள் சிதறினர் .......
பெரியவர் மடிந்தனர் .......
இளையவர் மறைந்தனர் .....
முற்றும் முழுதாய் .....
அழிக்கப் பட்டனர் ......
மாண்டவர் போக மிஞ்சியவர் யார் ....?
வெறும் நடைப் பிணங்கள் தானே ......
அழகான நம் தேசம் புதைக் குழி ஆனதா....?
விலையில்லா உயிர்களை கூண்டோடு அழித்ததா ....?
இறந்தோரை நினைத்து தினம் தினம் அழுவதா ...?
இருப்போரை நினைத்து நெஞ்சுருக்க துடிப்பதா .....?
சதியும் விதியும் எமனாய் வந்த காரணம் புரிவதற்கு .....
இல்லவே இல்லை கண்ணீர் இதற்க்கு மேல் அழுவதற்கு .....
தொகுப்பு :
சிந்து சிவசங்கர் .
No comments:
Post a Comment