பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Thursday, 9 June 2011

கண்ணீர்

கண்ணீர்

இயற்கை படைத்ததா இதயம் இல்லாதவர் தந்ததா.
காரணம் இல்லா கயவர்களின் காணிக்கையா.
யாருக்காக இந்த நீரோட்டம் மனிதவாழ்வில் மட்டும் ஏன் நிலை மாற்றம்.
பெண்கள் வாழ்வில் கூடப்பிறந்ததென்பது சரிதானா.
காலங்கள் மாறியும் செந்நீர் மட்டும் மாறவில்லையே.
திருந்தாத மனிதன் புரியாத போதனையா.
புரிந்துணர்வு இல்லாமல் புழுவாய் மாறுவது ஏன் தானோ.
காதல் கொண்டும் நீராய் வடிக்கின்றாய்.
கழுத்தை நீட்டியும் கண்ணீராய் மாறுகின்றாய்.
பாவத்தின் வேதனை மாறும் பொழுது பந்தாக்களும் மாறட்டுமே


கவிஞர் இராஜேந்திரகுமார்

No comments:

Post a Comment