பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Saturday, 11 June 2011

நட்பு

நட்பு



காலங்களின் கனவுகளை நிஜமாக்கும் சக்திகள் தானே.
இரத்த சொந்தங்களை விட உரிமை எடுத்து உறவாடும் உணர்வுகளே
நண்பர்கள் தாங்கி செல்லும் வசந்தங்கள்
வாழ்க்கையில் ஆறுதல் தூண்கள் தானே.
பள்ளி வாழ்க்கை தொடக்கம் பரலோகம் போகும் வரைக்கும்
நண்பர்கள் தானே துணை நிட்பார்கள் .என்றும் தாங்கிச்செல்வார்கள் .
வாழ்வில் எதனை சேர்த்தோம் கொண்டுபோக
நண்பர்களை மட்டும் சேர்த்தால் வாழ்ந்திடலாமே நிம்மதியாய்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கணப்பொழுதில் அனைத்திடுவார்களே .
அந்த நண்பர்கள் தினம் தானே இன்று நினைத்து பாக்கிறேன்
நினைவலைகளில் அந்த கனவலைகளை.


கவிஞர் இராஜேந்திரகுமார்

No comments:

Post a Comment