பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Wednesday, 15 June 2011

இந்த பாரிய தேசத்தில்

*இந்த பாரிய தேசத்தில்
எம் பாரிய தலைவன்
போல் உண்டோ ..நல்
தலைவன் நல் தமிழன்
நல்லவர்களின் நாயகன் ..நாடி
வருபவர்களின் நண்பன்!..
பகைவர்களுக்கு எதிரி ..நல்
பகுத்தறிவுக்கு நண்பன்!..
பசியில் வாடுபவர்களுக்கு ..நல்
பகிர்ந்தளிக்கும் பங்காளன்!..
ஏழை மக்களுக்கு ..நல்
ஏற்றமளிக்கும் எல்லாளன்!..
கடமையில் தவறாத ..நல்
கண்ணியமான காவல்காரன்!..
கயவர்களுக்கு கருவறுக்கும் ..நல்
களமாடும் கரிகாலன்!!

*........*தம்பி*.

No comments:

Post a Comment