பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Friday, 10 June 2011

கனவு

கனவு


மனிதனின் கருவறை தானே அவன் என்னங்களும் நினைவுகளும்
பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் அவனில் பிறந்தது தானே.
அவனோடு சேர்ந்தே வருவது வேறு யாரு சொல்லு.
பிறந்தவுடன் பெற்றோர்களின் நெஞ்சினிலே உதிர்த்திடுவாய்.
பள்ளி நாட்களில் வாழ்வை எண்ணி நொந்திடுவாய்
வாலிப வயதில் வரும் துணையை நினைத்தே மிதந்திடுவாய்
துணையும் வந்துவிட்டால் குழந்தைகளுக்காய் ஏங்கிடுவாய்
குழந்தைகளும் கிடைத்து விட்டால் அவர்கள் வாழ்விற்காய் உன்னை வருத்திடுவாய்.
பேரப்பிள்ளைகளை கொஞ்சும் ஆசையும் உன்னை விட்டு வைக்காதே.
காலத்தின் கட்டாயம் கனவுகள் நீ கண்டுதானே ஆகவேண்டும்
கண்ட கனவுகள் நிஜமாகும் போது.மறுபடியும் மறுபடியும் பிறந்திடுவாயே.



கவிஞர் இராஜேந்திரகுமார்

No comments:

Post a Comment