பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Thursday, 9 June 2011

காலம்

காலம்



கரைந்து போக துடிக்கும் உண்மைகள்.
வீனடிக்கின்றதே மனித இனம் ஏன் தானோ?
பொண்ணான நேரங்கள் மீண்டிடுமா எமக்காக,
காலடி வைப்பதை நேர்த்தியாக வைத்துப்பார்,
உன்னால் முடியாதது உண்டோ இந்த பூமியிலே,
ஓடிக்கொண்டு தான் இருக்கும் ஓய்வின்றி,
உனக்காக மாற்றிவிட்டாலே போதுமே உன்னடி சாயுமே,
வேர்வை சிந்தியும் வீணாய் போகிறதே என்று யோசிக்கின்றாயா?
உண்மை உன்னைவிட்டு போகவில்லை அதனை மட்டும் யோசி,
கரைந்து போகும் அதனை நிறுத்த முடியாது அது இயற்கை தானே,
காலம் உனக்காய் மாறும் போது உண்மையை மட்டும் மறக்காதே.

கவிஞர் இராஜேந்திரகுமார்

No comments:

Post a Comment