பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Monday, 13 June 2011

ஏழ்மை

ஏழ்மை


சேர்த்து வைக்கின்றான் எங்கே கொண்டு போக பூட்டி வைக்கின்றான்.
பாவங்களைத்தான் மூட்டையாக சேர்த்து வைக்கின்றான்.
மனித இனத்தை அடிமையாக்கி அவாப்பிடித்து அலைகின்றாயே.
ஆறடி நிலம், இல்லை நெருப்புத்தணல்இவைதானே கடைசியில் வரும் சொந்தம்.
பாழடைந்த உலகில் உன்வாழ்வு எவ்வளவு தூரம்.
கண் விழித்து தூங்கும் மனிதா அழித்து வாழ நினைகின்றாயே.
யாரிடம் போராட்டம் யாருக்காக போராட்டம்.
யாருமே இல்லா இந்த உலகில் ஏன் இந்த சூதாட்டம்.
சிறு தோல்வி கண்டு வெறுத்துப்போகும் மனிதா.
சில கால வாழ்வுக்குத்தானே சிக்கி தடுமாறுகின்றாய்.
மனித மனமே ஏழ்மை அதில் நீயென்ன நான் என்ன?

கவிஞர் இராஜேந்திரகுமார்

No comments:

Post a Comment