பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

மண்ணின் மைந்தர்களே

5.மண்ணின் மைந்தர்களே!

பூமியெனும் மஞ்சத்தில்
உறங்கிவிட்ட உயிர்களே
நிம்மதியை கண்டீரோ ...?
வாழ்வு போதுமென
நிரந்தரமாய் போனீரோ ...?

நித்தம் நித்தம் அழுதிடும்
உறவுகளின் அழுகுரல்
கேட்காமல் மாண்டீரோ ...?
பகைவர் சூழ்ச்சியால்
கூட்டமாய் சாய்ந்தீரோ ...?

இலக்கேனும் கனவது
அழிவதை தாங்காது
மண்ணுக்குள் புதைந்தீரோ ...?
செங்குருதி ஓடத்தில்
மூழ்கி தான் போனீரோ ...?

பட்டமது பறந்திடும்
அழகிய வானிலே
குண்டுதிர்வதை கண்டீரோ...?
வீழ்ந்ததும் பூமியது
எரிவதை பார்த்தீரோ ...?

பிஞ்சுதிர பூவுதிர
காயுதிர கனியுதிர
சோகத்தில் துடித்தீரோ ...?
நெஞ்சினில் நெருப்பை
தான் சுமந்தீரோ...?

குடிசையுடன் கோவிலும்
தரையுடன் படுத்து விட
நிழலின்றி தவித்தீரோ ...?
மர நிழல்கள்
போதுமென துவண்டீரோ ...?

எத்தினை ஆசைகளை
நெஞ்சினில் நீங்களும்
சுமந்து கொண்டு இருந்தீரோ ...?
சொல்லாமல் கொள்ளாமல்
சிதறுண்டு போனீரோ ...?

தாய் கண்ட கனவிலே
விடுமுறைக்கு ஒருமுறை
வீட்டுக்கு வந்தீரோ ....?
கனவது முடியும் முன்
கல்லறையில் படுத்தீரோ...?

தங்கையின் சிறு பாதம்
வாசலில் நின்று
உம்மை தேடுதே கண்டீரோ ...?
பக்கத்திலும் வாராமல்
பாராமல் போனீரோ ...?

தந்தையின் இருமலும்
தாயவளின் முனகலும்
தொலைவினில் கேட்டீரோ ...?
இல்லை தொலைத்து
விட்டு சென்றீரோ ...?

விழிகளில் சுமந்து வந்த
வலிகளை எல்லாம்
வீதியில் விட்டீரோ ...?
வழியின்றி
விதியோடு இணைந்தீரோ ...?

கடந்து வந்த பாதைகளை
கரடு முரடானதென
ஒரு வார்த்தை சொன்னீரோ ...?
வாழ்க்கையில் ஒரு
சுகமேனும் கண்டீரோ ...?

தமிழெனும் ஒரு மூச்சை
தவறாமல் சுவாசித்து
தள்ளாடி போனீரோ ...?
போகையிலும் தமிழன் தான் நானென்று
ஆணவமாய் உரைத்தீரோ ...?

காலன் உம்மை அழைக்க
காவு கொண்டு போக
காற்றோடு இணைந்தீரோ ...?
இதழோரத்தில் மென்னகையை
சோகமாய் விதைத்தீரோ ...?

போகுமிடமெல்லாம்
உம்பெயரை சொல்லும்
உயிர்களை மறபபீரோ...?
இல்லை மறைந்திருந்து
அழகாக ரசிப்பீரோ ...?

பிள்ளைகளை பறிகொடுத்த
அன்னையர் வயிற்றிலே
மறுபடியும் பிரப்பீரோ ...?
புது உலகினை
படைப்பீரோ ....?

நன்றி சிந்து

No comments:

Post a Comment