பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Wednesday, 15 June 2011

நாளை உனக்காகவே உருவாவோம்

*உயிரின் மேலான மானம்!!!*.....





*குருதி கறைபடிந்த கைகளாலான

இழவெடுத்த இத்தாலி சோனியாவே

உன் இனம் அறியுமா

மானமும் வீரமும் மனிதர்க்கு

அழகென்று போதித்தவன் தமிழனென்று!!....



நீ அறிவாயோ எம்புலி

வீரம் நேருக்குநேர் போரிடும்

பெண்புலிகள் இன்று தலை

சாய்ந்தபின் அவமானம் என்றும்

திருந்தாத உன் வன்மம்!!....



இழந்தது எம் சொந்தம்

உயிரின் மேலான மானம்

சாரயகடைகளில் சல்லாப நடனமாடிய

உனக்கு தெரியுமா உயிரின்

மேலானது மானம் என்று!!....



உயிர்தந்து உடல்வெந்து உருவாக்கிய

எங்கள் கனவுதேசம் உயிரற்று

உடைந்து போனது உயிரின்

அருமை உனக்கு தெரியுமா

இத்தாலி எருமையே உனக்கு!!....



காட்டி கொடுத்து காவு

வாங்கிய கருணாநிதியே எம்

காவல் தெய்வங்கள் கலங்கிய

பொழுதுகள் தெரியுமா உனக்கு

உயிரின் மேலான மானமிழந்து!!....



வேடிக்கை பார்த்த வேற்று

மனிதர்களே எங்கள் வேதனை

பாருங்கள் வேண்டி விழுகிறது

எங்கள் வேடந்தாங்கல் பறவைகள்

உயிரின் மேலான மானம்காக்க!!....



மாவீரனாய் வீழ்வதேமேல் என்று

மரணத்தையே மண்டியிட செய்த

எம் மாவீரர்களே மறுபடியும்

எழுந்து வாருங்கள் நம்தேச

பெண்டீர் மானம் காக்க!!....



எம் வால்வெட்டிதுறையின் வரலாறே

எம் வன்னிதேசத்தின் வள்ளலே

உம்பிள்ளைகள் இன்று பிணமாகிறோம்

இனம்காக்க இயன்று இயலாது

எங்கள் மானம் காக்க!!....



நீயேஎன்றும் வரலாறு நீயின்றி

ஏது எங்கள் வரலாறு

இனம்காக்க புலியானோம் இன்று

மானம் காக்க பினமாணோம்

நாளை உனக்காகவே உருவாவோம்!!....



எம் கலங்காத கரிகாலனே

என்றும் தயங்காத கார்த்திகேயனே

எண்ணத்தில் எண்ணற்ற எல்லாளனே

என்றும் எங்களின் ராஜராஜனே

உம் வரவை நோக்கி!!!

*............*தம்பி*......

No comments:

Post a Comment