
குற்றம் செய்துவிட்ட உணர்வு அவளுக்கா இல்லை எனக்கா
பட்டுத்தெளிந்த பின்பும் பயம் கொண்ட போக்கு தொடருதே
நிச்சயம் சொச்சக்கனவும் பலிக்குமா துளிர்க்குமா
கரவு வார்த்தையில் கண்கட்டி தினம் தூசி பறக்கின்றதே
முளையில் கிள்ளிவிட முயல்கின்றேன், முடியவில்லை யார் தப்போ
நித்தம் நெளிகின்றேன் நிம்மதிக்காற்றுக்கூட திரும்பி போகின்றதே
வானத்து நிலவில் ஊஞ்சல் கட்ட நினைத்தது மனதில் வந்த கோளாறா
மயக்கத்தில் நான் கண்ட பேராசையின் பையித்திய வேஷமா
ஏதோ ஒரு தோல்வி மனதில் வந்து வலியாக குத்துகின்றதே
கண்களில் மட்டும் அசையாத ஒரு உருவம் அவள் வருகைக்காக
ஏக்கத்திலேயே சொர்க்கம் காண்கின்றேன் தூயவள் நீ என்பதால்.
கவிஞர் இராஜேந்திரகுமார்
No comments:
Post a Comment