
அன்பே அன்று ...!
கவிதைகள் வரைந்தாய்
என்னை காதலிப்பதாக கூறி
என் மனதை பறி கொடுத்தேன்
நானும் உன் காதலில் மயங்கி ....
சில நாட்களில் பிரிந்தாய்
மீண்டும் வருவதாக கூறி
வந்த வரனை எல்லாம் தட்டி விட்டேன்
நானும் உன்னை நம்பி....
நீ வரவே இல்லை
செய்தி மட்டும் வந்தது
பொன்னோடு சேர்த்து - நீ
பெண்ணையும் மனம் முடித்தாய் என்று .....
என்னவர்கள் சூழ்ந்து நின்று
என்னை திட்டி தீர்க்கையில்
என் மனம் மட்டும்
உன் பொய்களை அசை போட்டது...
முதல் முதல் நாமிருவரும்
பார்வைகளை பகிர்ந்துக் கொண்ட
மணி கோபுரம் ....!!!
நீயும் நானும் கை கோர்த்து
நடந்த வயல் வரம்புகள்.......!!!
உனக்காக நானும் எனக்காக நீயும்
காத்திருந்த கருங்கற்பாறை .....!!!
நீ எனக்காக கால் கடுக்க நிற்கும்
குடி நீர் கிணற்றடி ஒற்றைப் பனை....!!!
மழைக்காக நாம் ஒதுங்கி நின்ற
பாதி கரைந்து போன மண் வீடு...!!!
வெயில் சுடச்சுட நடந்த
செம்மன் பாதை...!!!
நிழல் தேடி அமரும்
ஓங்கி நிற்கும் அடி வளவு வேம்பு...!!!
இவற்றை பார்க்கும் போதெல்லாம்
என் நெஞ்சே வெடித்து விடும் போலுள்ளது ...
என்னை மறக்க உன்னால் மட்டும் எப்படி முடிந்தது..!!!
இன்று அழுது வடிந்த விழிகளும் ...
குனிந்த தலை நிமிராமலும் ..
அவமானத்தில் கூனி குறுகி
நான் நடப்பதை
நீ அறிந்திருக்க நியாயமில்லை தான் ...
நீண்ட நேர யோசனைக்குப் பின்
உன் நினைவினை நீக்கவென்றேண்ணி
வீடு வாசல் விட்டு பெற்றார் உற்றாரைப் பிரிந்து
வேறு திசையில் செல்கிறேன் இன்னும் படிக்கலாமென ..
ஆனால் அங்கும் ......
விட்டுப் போன நினைவுகளின் துயரமும்
மரணித்துப் போன என் காதலின் நினைவுகளும்
மறக்க எத்தனிக்கையில்
மீண்டும் நீ வருகிறாய்
அன்பிற்காக மட்டும் ஏங்கும் இதயத்தோடு ...
காணாதது போல நடக்க நினைக்கிறேன்
ஆனால் ...!! நீயோ
வலிகள் ஆறா மனப்புங்களுடன்
நினைவினூடே பின் தொடர்கிறாய் ...
அன்பே நான் எப்படி சொல்ல ......
மரணப் படுக்கையிலும்
உன்னை மறக்கும் ஷக்தி
என் காதலுக்கு இல்லை போலும் ...!!!!!!!
சிந்து சிவசங்கர் .
No comments:
Post a Comment