பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Saturday, 11 June 2011

தூது

தூது

மூன்றாம் திங்களில் முறைத்தவளே,
காதலை நெஞ்சில் விதைத்தவளே,
காற்றையும் கண்ணால் கிழித்தவளே,
கவிதையாய் நெஞ்சில் நுழைந்தவளே,
மாலையில் மலராய் மலர்ந்தவளே,
என் மனதை சிரிப்பால் சிதைத்தவளே,
காவியத்தமிழாய் பிறந்தவளே,
கவின் மிகு அழகில் எனை …கவர்ந்தவளே,
மறந்தேன் எனை நானே,
மறைத்தாய் உன்னுள் எனையே,
பறந்தேன் என் நிலை மறந்தே,
உயிரை தொலைத்தேன் நொடியில்
நானே….அதுதானா…அதுதானா….
மனதை பிழியும் மகுடிச்சத்தம் கேட்டு
விழுந்தேன் அடி இதுதனா இதுதானா…..
மரணத்தை மரணித்தே உன்னோட வாழ துணிந்தேன்
அடி அதுதானா… அதுதானா…
மகரந்த சேர்கையில் விளைந்தவளே,
மணக்க துடிதேனடி உன்னை நினைக்கையிலே…!!!
அடி இது அதுதானா…??
முகிலே முகிலே…… தூது போ
என் மனதைச் சொல்ல தூது போ
கவியே கவியே தூது போ
என் காதலைச் சொல்ல தூது போ

KARTHIK V RAGHAV

No comments:

Post a Comment