
கனவினிலே மிதந்திடுவார்
கற்பனையில் மூழ்கிடுவார்
கடிதம் பல வரைந்திடுவார்
கன்னி வேட்டை செய்திடுவாரே ...
கவிதை எழுதி கொடுத்திடுவார்
கரம் பிடிப்போம் என்றிடுவார்
கல்யாணம் எனும் பெயரில்
கரகாட்டம் ஆடி நிற்ப்பாரே ...
கல கலப்பாய் வாழ்ந்திடுவார்
கவலைகளை மறந்திருப்பார்
கம்மல் வாங்கி அவளுக்கும்
கடிகாரம் அவனுக்கும் பரிசளித்து கொள்வாரே ....
கண்மணி என்று கொஞ்சிடுவார்
கணவன் அன்பில் தன்னை மறப்பாள்
கடுகளவும் அவன் அன்பு
கரையாமல் இருக்க வைப்பாளே ...
கருவொன்று தரித்ததென்பார்
கர்பிணி தான் என்றுரைப்பாள்
களிப்புடனே கவிதையவளை
கசங்காமல் பார்த்திடுவாரே ...
கண்டு வந்த கனவு படி
கண்ணனவன் பிறந்து விட
கதர் துணியில் தொட்டிலொன்று
கட்டி அதில் தூங்க வைப்பாரே ...
கஞ்சிக்கு வரும் ஏழை பெண்ணுக்கு
கரி நாக்கு என்று சொல்லி
கன்னத்திலே கண்ணனுக்கு
கருப்பு பொட்டு வைத்திடுவாறே ...
கந்தன் கோவில் வாசலிலே
கணபதிக்கு விளக்கேற்றி ...
கற்பூரம் ஏற்றி செய்த நேர்த்தி
கடனை எல்லாம் முடித்து வைப்பாரே ...
கள்ளிப் பாலை குடித்து சாக
கலைவானியாய் பெண்ணொருத்தி
கந்தையன் மனைவிக்கு
கனிவுடனே பிறந்திடுவாளே...
கயவரெல்லாம் சொந்தமாவார்
கள்ளர் எல்லாம் உள்ளிருப்பார்
கபடம் இல்லா நல் உறவுகள்
கட்டை தாண்டி வெளியில் நிற்பாரே ...
கரும்பாக பேசிடுவார்
கரு நாகமாய் மாறிடுவார்
கழு மரத்தில் ஏற்றி சிலர்
கதை முடிக்க பார்த்திருப்பாரே ....
கழுதை மீது தாம் ஏறி
கடிவாளத்தை தேடிடுவார்
கற்கண்டை கண்டு விட்டால்
கட்டெறும்பாய் மாரிடுவாறே ....
கறவை மாடு பின் வளவில்
கறந்த பாலில் பாதி எடுத்து
கலந்து நீரை விற்றிருப்பார்
கன்றை பசியில் தவிக்க விட்டாரே ...
கலப்பை மாடு வயலினிலே
களை நடுவார் வரம்பினிலே
கச்சை கட்டிய வயல் காரர்
கத்தி வேலை செய்ய வைப்பாரே ...
கல்லூரியில் கூட படித்த
கட்டழகியை பார்த்தும் கூட
கதைக்காமல் வெட்கத்திலே
கடை தெருவில் மறைந்து கொள்வாரே ...
கத்தரிக்காய் தோட்டத்திலே
கரப்புக்குள்ளே கோழி குஞ்சு
கடுவன் பூனை அடுக்கலையில்
கலசத்திலே கறந்த பாலென்று நினைத்திருப்பாரே ...
கவர்ந்து கண்ணை பறிக்கும் உடை
கவர்ச்சியாக உடுத்தும் அவளை
கடைக்கண்ணால் பார்த்து பயத்தில்
கட்டியவளை தேடி நிற்ப்பாரே ...
கஞ்ச தனத்தை காட்டும் கணவன்
கல்லாவில் பணம் பதுக்கி
கண்டவளுக்கு செலவிடுவதை
கண்டித்து கோபம் கொள்வாளே ...
கருவேலம் பட்டை வாசம்
கட்டறுத்து பரவுவதாய்
கலகமென்றால் குடும்பத்திலே பலர்
கரகோசமாய் சிரித்திடுவாரே ...
கனன்று கண்கள் கணவன் கத்த
கயல்விழியவள் காளியாக
கட கடக்கும் சட்டிப் பானை
கதவிடுக்கில் வெளியில் செல்லுமே ....
கசியும் நீரை கண்ணில் தேக்கி
கலவரமாய் பார்க்கும் சேய்கள்
கலக்கமதை பார்க்காமல்
கண்டபடி பேசி தீர்ப்பாரே ...
கசாப்பு கடை பக்கத்திலே
கடாவை விலை பேசி விட்டு
கள்ளு கடை வாசலிலே
கல்லின் மேல் அமர்ந்திருப்பாரே ....
கலியுகத்து காதலிலே
கண்ணடித்து காதலென்று
கங்கணங்கள் கட்டிக் கொண்டு
கஷ்டம் இன்றி சேர்ந்து கொள்வாரே ....
களவானி கூட்டத்திலே
கற்புண்டோ காதலுக்கே
கருமம் தனை முடித்து கொண்டு
கருவேப்பிலை ஆக்கிடுவாறே ...
கனிந்து இருந்த காதல் சாக
கருகி விட்ட வாழ்வை எண்ணி
கம்பளியால் மூடிக் கொண்டு
கவிழ்ந்து அவளும் படுத்திருப்பாளே...
கடப்பாரைக்கும் கலங்காத
கருங்காளியாய் அவள் கணவனும்
கஞ்சா விற்கும் இடங்களையே
கதியென்று கிடப்பானே ...
கடுக்கனையும் விற்று அவள்
கடக் குட்டிக்கு பால் கொடுப்பாள்
கச்சிதமென நினைத்த வாழ்வை
கத்தரித்துச் சென்றிடுவாளே ....
கட்டு மரத்தில் அவள் சென்றிட
கண்டுக்காமல் அவனும் போக
கலை இழந்த பிள்ளைகளும்
கதறி அழுது புலம்புவாரே ...
கப்பலொன்று புயல் காற்றுக்கு
கடல் நடுவே தவிப்பது போல்
கஷ்டங்களை சொல்லாமல்
கண்ணீரை சிந்தி நிற்பாரே ...
கப்பம் இன்றி வாங்கி வரும்
கமலம் போன்ற புரிந்துணர்வை
கருத்தோடு பார்க்காமல்
கல்லறைக்குள் புதைத்ததினாலே ...!!!
nanry sinthu
ReplyDelete