இரவின் அவஸ்தைகள்
மனதுக்குள் மேகக்கூட்டம் மத்தளமாய் இடி முழக்கம்
அது ஏனோ தெரியவில்லை.
உன்னை பார்த்த நொடி பொழுதில்
எனக்குள் பல மாற்றங்கள்..
சில நேரமே நீ இருந்தாய் சிறகு தந்து
சென்று விட்டாய் என் காதல் வானில்
தனியாய் நான் பறக்கின்றேன்
ஏதேதோ படித்திருந்தும் ஒன்றும் தோன்றவில்லை
உன்னோடு பேசி மகிழ..
என் வாழ்வில் ஒரு நொடிக்குள்
ஒரு யுகத்தை மறைத்து வைத்தாய்
என் காதல் போராட்டம் நம் திருமண தேரோட்டமாய் மாறாதோ…!!!
என் காதல் முகவரி நீ தான்….
வழி தெரியாமல் தவித்தேனே….
வெளிச்சமில்லா காட்டினுள்ளே
தனியாககிடந்தேனே..
வழி போக்கன் யாரும் இல்லை…
பேசி செல்ல துணையும் இல்லை..
உன் நினைவு மட்டும் துணையோடு…
வருகின்றேன் உன்னை தேடி…
விழியோரம் ஏனோ கண்ணீர்…
புரியவில்லை அது தெரியவில்லை..என் சகியே….!!
நீ ஏன் என் வாழ்வில் வந்தாய்,,.
என் பொழுதுகள் எல்லாம் அள்ளி சென்றாய்…
இரவா பகலா உணரமுடியா ஒரு உணர்வை விட்டு
சென்றாய் இரவின் பொழுதுகளை,
இமை மூடாமல் கழிக்கிறேன்
இன்னிசை பொங்கும் உன் குரல் கேட்க தவிக்கிறேன்
யாரை பார்த்தாலும் நீயே என் நினைவில்..
கேட்கும் வார்த்தை எல்லாம் உன் பெயர் தான் ,,.
நடக்கும் பாதை எல்லாம் உன்னிடமே செல்லாதோ.
என்னுள்ளே எதோ ஒரு மாற்றம்..
உன்னை காணும் கணப்பொழுதில்
கலங்குதடி என் இளமை..
ஒரு நொடிக்குள் ஓராயிரம் அர்த்தத்தை தந்துவிட்டாய்..
இமைகள் இரண்டும் இயக்கத்தை நிறுத்தின,,
ரத்த நாளங்கள் உன் பெயரையே முன் மொழிகின்றன..
பேரவஸ்தை தந்துவிட்டது உனது பெயர்..
என் மனதில் ஒரு சொல் மட்டும்
ஓங்காரமாய் ஒலிக்கின்றது……
அது உன்னை சேரும் நாளை நோக்கியே
என் கால்கள் நடக்கின்றது…
என்று சொல்வாய் உன் பதிலை…..????
என் இமைகள் தேடும் உருவம் நீ தானே….
என் இதயம் தேடும் இதயம் நீ தானே…
என் இமைகளை பிடுங்கி தூங்க சொல்லும் பெண்ணே…
என் இரவை எல்லாம் ஒலித்து வைத்தாயோ…
தொலை தூர உன் பார்வையில் நான் தொலைந்தே போகிறேன்..
சில நேர பிரவுகளில் நான் செத்து பிழைக்கிறேன்
வேண்டாமடி இன்னும் மௌனம்….
என் மனம் கொண்டது சலனம்…
என்னுள்ளே ஒரு மாற்றம் தந்தவள் நீயே…
ஏதேதோ பேசித்தான் எனை உன்னுள் ஒளிதுவைதாயே..
காரணமே இல்லாமல் நான் கல்தூனாய் நிற்கின்றேன்..
காவியமே உன்னை பாட நான் வார்த்தைகளற்று கிடக்கின்றேன்,,,
நீ பார்க்கும் இடமெல்லாம் என் பயணம் போகுதே..
உன் வரவை தேடியே என் உலகம் தவிக்குதே…
என்று நீ சேர்வையோ? ஒன்றாக கலப்பையோ.?
இனி காலம் முழுதும் பெண்ணே
என் பொழுதுகள் உன்னுடன் தானே..
எனை இம்சிக்கவே இரவுகளை நீ தந்து விட்டாயோ.
by karthikraghavendran
No comments:
Post a Comment