பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Monday, 13 June 2011

வாழ்க்கை

வாழ்க்கை


காலம் என்னும் ஓடத்திலே பயணம் செய்யும் நேரத்திலே.
இன்ப துன்ப காலத்திலே யாருக்காக யாரோ.
போகும் பாதை தெரியவில்லை தேடல் கூட குறையவில்லை.
எதனை தேடி அலைகின்றாய் யாருக்காக துடிக்கின்றாய்.
காவலுக்கு நின்றதுகள் மேய்கின்றது கண்ணைத்தானே கட்டிக்கொண்டு
மனிதனையே தெய்வமாய் ஆக்குகின்றாய் ஆசைக்கே அடிமைப்பட்டு.
எத்தனை வேஷங்கள் எத்தனை அரங்குகள்.
கண் கட்டி நடைபிணமாய் வாழ்கின்றாயே ஏன் மனிதா?
உன்னை புரிந்து கொண்டு உண்மையாக வாழ்ந்து பார்.
பிறந்த பயனை அடைந்திடுவாய் நீயும் மனிதனாய்.
பாவிகள் கூட்டம் தான் பார்த்து நடந்து பார், சுமைகள்கூட தூரப்போகும்.

கவிஞர் இராஜேந்திரகுமார்

No comments:

Post a Comment