பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Monday, 13 June 2011

ஓயோம்

*புலிகள் என்றும் புலிகளே
வீழ்ந்தாலும் எழுந்தாலும்
நாளை வரலாறு அவர்களே
எம் தமிழ் வரலாறு அவர்களே!!...

ஆம் எம் தேசத்து மங்கைகள்
கூட மலர்கள் தான் கவனம்
எம் தேசத்து மலர்கள் கூட
புலிகள் தான்!!......

ஆம் எம் தேசத்து காற்று கூட
எங்கள் தேச வீரம் கூறும் ... கவனம்
காற்றுக்கும் கருவறுக்க தெரியும்
கவனம் கயவர்களே எங்கள் தேச காற்று!!....

தமிழனை தமிழன் ஆளனும்
தமிழன் நன்றாக வாழனும்
தமிழனுக்கு தனிதேசம் வேணும்
அது தமிழீழ தேசமாகவேனும்
அதுவரை ஓயோம்!!!*
..........*தம்பி*.....

No comments:

Post a Comment