பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Saturday, 11 June 2011

நட்பு

நட்பு



காலங்களின் கனவுகளை நிஜமாக்கும் சக்திகள் தானே.
இரத்த சொந்தங்களை விட உரிமை எடுத்து உறவாடும் உணர்வுகளே
நண்பர்கள் தாங்கி செல்லும் வசந்தங்கள்
வாழ்க்கையில் ஆறுதல் தூண்கள் தானே.
பள்ளி வாழ்க்கை தொடக்கம் பரலோகம் போகும் வரைக்கும்
நண்பர்கள் தானே துணை நிட்பார்கள் .என்றும் தாங்கிச்செல்வார்கள் .
வாழ்வில் எதனை சேர்த்தோம் கொண்டுபோக
நண்பர்களை மட்டும் சேர்த்தால் வாழ்ந்திடலாமே நிம்மதியாய்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கணப்பொழுதில் அனைத்திடுவார்களே .
அந்த நண்பர்கள் தினம் தானே இன்று நினைத்து பாக்கிறேன்
நினைவலைகளில் அந்த கனவலைகளை.


கவிஞர் இராஜேந்திரகுமார்

கனவு

கனவு





மனிதனின் கருவறை தானே அவன் என்னங்களும் நினைவுகளும்
பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் அவனில் பிறந்தது தானே.
அவனோடு சேர்ந்தே வருவது வேறு யாரு சொல்லு.
பிறந்தவுடன் பெற்றோர்களின் நெஞ்சினிலே உதிர்த்திடுவாய்.
பள்ளி நாட்களில் வாழ்வை எண்ணி நொந்திடுவாய்
வாலிப வயதில் வரும் துணையை நினைத்தே மிதந்திடுவாய்
துணையும் வந்துவிட்டால் குழந்தைகளுக்காய் ஏங்கிடுவாய்
குழந்தைகளும் கிடைத்து விட்டால் அவர்கள் வாழ்விற்காய் உன்னை வருத்திடுவாய்.
பேரப்பிள்ளைகளை கொஞ்சும் ஆசையும் உன்னை விட்டு வைக்காதே.
காலத்தின் கட்டாயம் கனவுகள் நீ கண்டுதானே ஆகவேண்டும்
கண்ட கனவுகள் நிஜமாகும் போது.மறுபடியும் மறுபடியும் பிறந்திடுவாயே.


கவிஞர் இராஜேந்திரகுமார்

அவளின் நினைவுகள்

அவளின் நினைவுகள்


காதல் வந்தும் சொல்லாமல் என்னை
கட்டி போட்டு சென்றாயே நியாயமா .
வாய் திறந்து பேசமால் கண்ணால் என்னை
வெட்டி சாய்த்த்தையே இது உனக்கு தகுமா.
உன் மௌனம் களையும் நேரம் என் வாழ்வில்
வசந்த காலம். உன்”உம்”எனும் ஒற்றை
வார்த்தைக்காய் காலத்தை நான் கடத்தி
செல்கிறேன்.என் சஹியே.
என் உணர்வுக்கு உணர்ச்சியை தந்தவள் நீயே….
என் வயதுக்கு …சாட்சியாய் இருப்பவளும் நீயே….
நீ இல்லை என்றால் நான் இங்கு நான் இல்லை.
நீயே என் வாழ்வின் எல்லை.


by karthikraghavendran

இரவின் அவஸ்தைகள்

இரவின் அவஸ்தைகள்


மனதுக்குள் மேகக்கூட்டம் மத்தளமாய் இடி முழக்கம்
அது ஏனோ தெரியவில்லை.
உன்னை பார்த்த நொடி பொழுதில்
எனக்குள் பல மாற்றங்கள்..
சில நேரமே நீ இருந்தாய் சிறகு தந்து
சென்று விட்டாய் என் காதல் வானில்
தனியாய் நான் பறக்கின்றேன்
ஏதேதோ படித்திருந்தும் ஒன்றும் தோன்றவில்லை
உன்னோடு பேசி மகிழ..
என் வாழ்வில் ஒரு நொடிக்குள்
ஒரு யுகத்தை மறைத்து வைத்தாய்
என் காதல் போராட்டம் நம் திருமண தேரோட்டமாய் மாறாதோ…!!!
என் காதல் முகவரி நீ தான்….
வழி தெரியாமல் தவித்தேனே….
வெளிச்சமில்லா காட்டினுள்ளே
தனியாககிடந்தேனே..
வழி போக்கன் யாரும் இல்லை…
பேசி செல்ல துணையும் இல்லை..
உன் நினைவு மட்டும் துணையோடு…
வருகின்றேன் உன்னை தேடி…
விழியோரம் ஏனோ கண்ணீர்…
புரியவில்லை அது தெரியவில்லை..என் சகியே….!!
நீ ஏன் என் வாழ்வில் வந்தாய்,,.
என் பொழுதுகள் எல்லாம் அள்ளி சென்றாய்…
இரவா பகலா உணரமுடியா ஒரு உணர்வை விட்டு
சென்றாய் இரவின் பொழுதுகளை,
இமை மூடாமல் கழிக்கிறேன்
இன்னிசை பொங்கும் உன் குரல் கேட்க தவிக்கிறேன்
யாரை பார்த்தாலும் நீயே என் நினைவில்..
கேட்கும் வார்த்தை எல்லாம் உன் பெயர் தான் ,,.
நடக்கும் பாதை எல்லாம் உன்னிடமே செல்லாதோ.
என்னுள்ளே எதோ ஒரு மாற்றம்..
உன்னை காணும் கணப்பொழுதில்
கலங்குதடி என் இளமை..
ஒரு நொடிக்குள் ஓராயிரம் அர்த்தத்தை தந்துவிட்டாய்..
இமைகள் இரண்டும் இயக்கத்தை நிறுத்தின,,
ரத்த நாளங்கள் உன் பெயரையே முன் மொழிகின்றன..
பேரவஸ்தை தந்துவிட்டது உனது பெயர்..
என் மனதில் ஒரு சொல் மட்டும்
ஓங்காரமாய் ஒலிக்கின்றது……
அது உன்னை சேரும் நாளை நோக்கியே
என் கால்கள் நடக்கின்றது…
என்று சொல்வாய் உன் பதிலை…..????
என் இமைகள் தேடும் உருவம் நீ தானே….

என் இதயம் தேடும் இதயம் நீ தானே…

என் இமைகளை பிடுங்கி தூங்க சொல்லும் பெண்ணே…
என் இரவை எல்லாம் ஒலித்து வைத்தாயோ…
தொலை தூர உன் பார்வையில் நான் தொலைந்தே போகிறேன்..

சில நேர பிரவுகளில் நான் செத்து பிழைக்கிறேன்

வேண்டாமடி இன்னும் மௌனம்….
என் மனம் கொண்டது சலனம்…
என்னுள்ளே ஒரு மாற்றம் தந்தவள் நீயே…
ஏதேதோ பேசித்தான் எனை உன்னுள் ஒளிதுவைதாயே..
காரணமே இல்லாமல் நான் கல்தூனாய் நிற்கின்றேன்..
காவியமே உன்னை பாட நான் வார்த்தைகளற்று கிடக்கின்றேன்,,,
நீ பார்க்கும் இடமெல்லாம் என் பயணம் போகுதே..
உன் வரவை தேடியே என் உலகம் தவிக்குதே…
என்று நீ சேர்வையோ? ஒன்றாக கலப்பையோ.?
இனி காலம் முழுதும் பெண்ணே
என் பொழுதுகள் உன்னுடன் தானே..
எனை இம்சிக்கவே இரவுகளை நீ தந்து விட்டாயோ.


by karthikraghavendran

சிரிப்பு

சிரிப்பு



பிறப்புக்க்ம் இறப்புக்குமான இடைவெளியை

சிறப்பிக்கும் ஒரே செயல் – சிரிப்பு ,

அகத்தில் தோன்றும் நினைவுகளின்

புற வெளிப்பாடு – சிரிப்பு

முகத்தை அழகாக்கும் ஒரு

அழகு சாதனம் – சிரிப்பு ,

சிரித்து பார்,

சிறகுகள் முளைக்கும் ,

இறகுகள் விரியும்,

சிறகுகளை விரித்து சந்தோஷ

வானில் பறக்க எத்தனிப்பாய்,

கார்மேகுத்துள் ஒளிந்து கண்ணாமூச்சி

ஆடும் கதிரவனை நீ ரசிப்பாய் ,

என்றும் ஒன்றாய் கூடி களிக்கும்

பறவை கூட்டத்தின் ஒற்றுமையை கண்டு வியப்பாய் ,

நீரோடையின் சலசலப்பில்

புதுராகங்கள் கேட்டுணர்வாய் ,

கருநீலசாலையில் நட்சத்திர

பூக்களை எண்ணி நகைப்பாய் ,

படபடக்கும் பட்டாம்பூச்சியை பார்க்கையிலே

பரபரக்கும் இந்த உலகை நீ மறந்திடுவாய் ,

பச்சை கம்பளம் விரித்த வயல் வெளிபோல

உன் எண்ணங்கள் பசுமையாகும்,

வாஞ்சையுடன் தலை கோதும் தாயின்

அரவணைப்பை சிரிக்கையிலே நீ உணர்வாய் ,

மழலையின் அழகு சிரிப்பு

மகுடத்தில் உன்னை ஏற்றும் ,

அரும்பு மீசை சிரிப்பு

உன் பருவத்தை எடுத்துக்காட்டும் ,

தனிமையில் சிரிப்பு

உன் காதலை உலகுக்கு எடுத்துரைக்கும்,

பொக்கை வாய் சிரிப்பு

அன்பின் அடையாளமாய் விளங்கும்,

வெற்றியில் மௌன சிரிப்பு

உன் புகழை பாடும்,

தோல்வியின் கோப சிரிப்பு

உன்னை செதுக்கி சிலையாக்கும் ,

ஏளன சிரிப்பை மட்டும் நீ விட்டொழி

அது உன்னை மனிதனாக்கும்,

பூக்களின் சிரிப்பு கணிகளின் பிரசவத்தில் ,

ஏழையின் சிரிப்பு

புரட்சியின் வெற்றி திலகம்,

அடிமையின் சிரிப்பு

சுதந்திரத்தின் வெளிப்பாடு ,

காலத்தின் சிரிப்பு மரணத்தின் அத்தியாயம்……:):):):):):):):):)


by karthikraghavendran